'சினோவேக்' கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்று பகல் முதல் ஒரு சில தனியார் மருந்தகங்களில் போடப்படத் தொடங்கின. அரசாங்கத்தின் தற்போதை இருப்பில் உள்ள 'சினோவேக்' தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள 24 தனியார் சுகாதார பராமரிப்பு மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து நேற்று இத்தடுப்பூசியைப் போடும் பணிகள் தொடங்கின.
இதற்கிடையே சில மருந்தகங்களுக்குத் தடுப்பூசி இன்னும் வராத காரணத்தால் வந்தவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர் அம்மருந்தக ஊழியர்கள்.
'சினோவேக்' தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துகொள்வோர், இரண்டு வாரங்கள் அல்லது அதற்கு மேலும் காத்திருக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.