எம்ஆர்டி ரயிலில் இனவாதக் கருத்துகளைத் தெரிவித்து காணொளியில் சிக்கிய முன்னாள் சொத்து முகவர் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
வெவ்வேறு இனக்குழுக் களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் அவரது செயல் இருந்ததாக குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் முகவரான 57 வயது டான் பியோவ் ஹியோங் மொத்தம் இரண்டு குற்றச்சாட்டு களை எதிர்நோக்குகிறார். பொது இடங்களில் தொல்லை விளைவித்தது அவற்றில் ஒன்று. இரு வெவ்வேறு சம்பவங்களில் அவர் குற்றச் செயல்களைப் புரிந்துள்ளார்.