மக்கள்தொகை: வருமுன் காக்கும் அணுகுமுறை அவசியம்

மக்கள்தொகை: வருமுன் காக்கும் அணுகுமுறை அவசியம்

4 mins read
46dbe5b1-5dff-4d7b-82be-a6e33da7a347
-

முரசொலி

சிங்­கப்­பூர் மக்­கள்­தொ­கை­யில் 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரைப்­பட்ட பத்­தாண்டு காலத்­தில் குறிப்­பி­டத்­தக்க பெரிய மாற்­றங்­கள் நிகழ்ந்து இருக்­கின்­றன. நாட்­டின் ஆறா­வது மக்கள் தொகை கணக்­கெ­டுப்பு மூலம் முக்கியமான பல நில­வ­ரங்­கள் தெரிய வந்­துள்­ளள.

சிங்­கப்­பூர் 1965ல் சுதந்­தி­ரம் அடைந்­தது முதல் மக்­கள்தொகை பெருக்­கம் இந்த பத்­தாண்­டு­க­ளில்­தான் ஆகக் குறை­வாக இருக்­கிறது. ஒற்­றை­யராகவே வாழும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாகி இருக்­கிறது.

திரு­ம­ணம் செய்துகொண்­ட­வர்­களும் குறை­வா­கவே பிள்­ளை­க­ளைப் பெற்­றுக்­கொண்டு உள்­ள­னர். ஆகைல் குழந்­தை பிறப்பும் குறைந்­து­விட்­டது.

எல்லா வயது, எல்லா இன மக்­க­ளுமே கல்வியில் மேம்­பட்டு இருக்­கி­றார்­கள். சம­யம் சாரா­த­வர்­கள் என்று தங்­க­ளைச் சொல்­லிக்கொள்­ளும் சிங்­கப்­பூரர்­கள் எண்­ணிக்கை அதி­க­மாகி இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் குடி­மக்­கள், நிரந்­த­ர­வாசி­களில் ஏறக்­கு­றைய 100,000 பேர் சுய­மா­கச் செயல்­பட திண­று­கி­றார்­கள். அல்­லது அப்­படி செயல்­பட முடி­யா­மல் இருக்­கி­றார்­கள்.

இவை எல்­லாம் மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பு மூலம் தெரிய வந்து இருக்­கும் முக்­கி­ய­மான நில­வரங்­கள். இந்தக் கருத்­தெ­டுப்பு ஒரு சாராம்சத்தைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

அதா­வது, உல­கில் வேக­மாக மூப்­ப­டைந்து வரும் சமூ­கங்­களில் சிங்­கப்­பூரும் ஒன்று என்­பதே அந்த உண்மை நில­வ­ரம். இங்கு 2030ஆம் ஆண்டு வாக்கில் மக்­களில் நான்கு பேரில் ஒரு­வ­ருக்கு வயது 65க்கு அதி­க­மாக இருக்­கும் என்­பது ஒரு கணக்­கீடு.

இது ஒரு­பு­றம் இருக்க, பிறப்பு விகி­த­மும் குறைந்து வரு­கிறது. இதை­யும் கவ­னத்­தில் கொண்டு பார்க்கை­யில், பொரு­ளி­ய­லி­லும் சமூ­கத்­தி­லும் இந்த நில­வ­ரங்­கள் ஏற்­ப­டுத்­தக்கூடிய தாக்­கங்­கள் மிக­வும் அதி­க­மா­கவே இருக்­கும் என்­ற முடிவுக்கு வரலாம்.

வேலை பார்ப்­போரைப் பொறுத்­த­வரை, அவர்கள் அதி­க­மாக வரி செலுத்த வேண்­டிய நிலை வரும்.

அதோடு, இதர பொரு­ளி­யல் சுமை­க­ளை­யும் அவர்களே சுமக்க வேண்டி இருக்­கும். முதியோரில் முன்பை­விட அதி­க­மா­ன­வர்­கள் தனிக வசிப்­பார்­கள். வீடு­களில் முதி­யோ­ரைப் பார்த்­துக்கொள்ளக்­கூ­டிய பிள்­ளை­க­ளின் எண்­ணிக்­கை­யும் குறை­வா­கவே இருக்­கும். இதற்கு உரிய தீர்வாக வீட்டுவேலை பணிப்­பெண்­களை வேலையில் அமர்த்­த வேண்­டிய நிலை வரும். முதி­ய­வர்­களை வீட்­டி­லேயே பரா­மரிக்­கும் ஊழி­யர்களுக்­கும் தாதி­யர்­க­ளுக்­கும் தேவை அதி­க­மா­கும்.

இவை எல்­லாம் ஒருபுறம் இருக்­கட்­டும். மனிதர்­களுக்கு வயது ஆக ஆக பொது­வாக நோய்­களும் பல தொல்­லை­களும் அதிகரிக்­கவே செய்யும் என்­பதை­யும் கவ­னிக்க வேண்­டும். நினை­வாற்­றலை இழப்­பது, நீரி­ழிவு, இதய நோய் எல்­லாம் ஏற்­படு ­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் இருக்­கும்.

சிங்­கப்­பூ­ர் மக்­க­ளின் ஆயுள் அதி­கம், அவர்­கள் அதிக காலம் வாழ்­வார்­கள். அதோடு, அத்த­கைய மக்­க­ளின் எண்­ணிக்கை கூடும் என்­ப­தால் அதற்கு ஏற்ப சுகா­தார பரா­ம­ரிப்­புச் சேவை­கள் எல்­லாம் அவர்­க­ளு­க்குக் கிடைக்­கக்­கூ­டி­யவைக, கட்­டு­படிகக் கூடி­யவைக இருக்­க­வேண்­டி­யது கட்­டா­ய­மா­னது.

இவற்றை எல்­லாம் முன்­ன­தா­கவே கணித்து, கணக்­கிட்டு அர­சாங்­கம் பல்­வேறு ஏற்­பா­டு­களை, திட்­டங்­களை இடை­வி­டா­மல் செயல்­ப­டுத்தி வரு கிறது. புதிய மருத்­து­வ­ம­னை­கள் கட்­டப்­ப­டு­கின்றன. தாதிமை விடு­தி­களும் உரு­வாகி வரு­கின்­றன. சமூக, அடிப்­படை சுகா­தார பரா­ம­ரிப்­புக்­க­கான வளங்­கள் அதி­க­மாக்­கப்­ப­டு­கின்­றன.

முது­மை­யில் இளமை என்ற இலக்கு நிர்­ண­யிக்கப்­பட்டு, அதை நிறை­வேற்ற பல்­வேறு முயற்சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, முதி­யவர்­கள் சுறு­சு­றுப்­பாக இருந்து வர ஊக்­க­மூட்­டப்­ப­டு­கி­றார்­கள்.

சுகா­தார மரா­ம­ரிப்­புக்கு ஆகும் செலவைக் குறைத்து சிக்­க­ன­மாக்குவது, இதில் ஒளிவு மறைவு இல்­லாத நிலையை எப்­படி உறு­திப்­ப­டுத்­து­வது ஆகியவை எல்­லாம் மும்­மு­ர­மாக விவா­திக்­கப்­பட்டு வருக்­கின்­றன.

பரா­ம­ரி­ப்பா­ளர்­க­ளைச் சார்ந்து இருக்­கும் முதி யோர் எண்­ணிக்கை அதி­க­மா­கும் என்­ப­தால் அத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்­குச் சுமை கூடும்.

காலம் மாறு­வ­தால், மருத்­துவ கண்­டுபி­டிப்­பு­கள் மேம்­ப­டு­கின்­றன என்­ப­தால் அதற்கு ஏற்ப பராமரிப்பு ஊழி­யர்­க­ளுக்­குத் தேவைன அறி­வைப் போதித்து, ஆற்­றல், தேர்ச்­சி­க­ளைக் கற்­பித்து அவர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­க­வே­ண­டிய தேவை­யைத் தவிர்க்க இய­லாது.

வீட்­டி­லேயே தாதி­யர்­கள் பரா­ம­ரிப்­புச் சேவையை வழங்­கு­வது, மருத்­துவ, இதர பரா­ம­ரிப்­புத் திட்டங்கள் போன்­ற­வற்றை அதி­க­மாக்கி, குடி­யி­ருப்­புப் பேட்டைக்­குள் சிறார் பரா­ம­ரிப்­புச் சேவை­கள் இடம்­பெறுவதைப் போல், முடிந்­தால் அவற்­றைச் சமூ­கத்­திற்கு உள்ளேயே இடம்பெறச் செய்­வது பொருத்­த­மா­ன­தாக இருக்­கும். முதியோர் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு முத­லாளி­கள் அதிக ஆத­ரவு தர வேண்­டி­யது மிக­வும் முக்­கி­ய­மா­னது. இல்லை எனில் இவர்­கள் வேலையை விட்­டு­விட்­டுச் சென்­று­வி­டு­வார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் முந்­தைய பத்­தாண்டு காலத்­து­டன் ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில் 2010 முதல் 2020 வரைப்­பட்ட பத்­தாண்டு காலத்­தில் முதிய சிங்­கப்­பூ­ரர்­களின் உடல் நல­னும் ஆயு­ளும் மேம்­பட்டு இருக்­கிறது என்பது தெரியவருகிறது.

ஆகைல் அவர்­களில் அதி­க­மா­ன­வர்­கள் கூடு மானவரை வேலை பார்க்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக, தொண்டூழியர்­க­ளாக, தங்­க­ளைத் தாங்­கள் கனித்­துக் கொள்­ளக்­கூ­டி­வர்­க­ளாக இருந்து வந்­தால் அதுவே சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கக்க கூடிய பல பிரச்­சினைகளுக்­குத் தீர்­வா­கி­வி­டும்.

பொருத்­த­மான தேர்ச்­சி­க­ளைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு அவர்­கள் தொடர்ந்து வேலை பார்க்­க­வும் முடி­யும். இதைப் பொறுத்­த­வரை இரண்டு அம்­சங்­கள் மிக­வும் முக்­கி­ய­மா­னவை.

ஒன்று, சிங்­கப்­பூ­ரர்­கள் ஆயுள் முற்­றி­லும் கற்பதில் நாட்­டம்கொள்ள வேண்­டும். முதி­யோர் தொடர்பிலான முத­லா­ளி­க­ளின் மனப்­போக்கு மாற வேண்­டும்.

சிங்­கப்­பூர் மக்­கள்தொகையைப் பொறுத்­தவரை மிக முக்­கி­யமான நில­வ­ரங்­கள் இப்போது தெரி­ய­வந்­து உள்ளன.

அவற்றால் ஏற்­ப­டக்­கூ­டிய பாத­கங்களைச் சாதகங்­களாக மாற்­றிக்­கொள்ள தேவைப்­படும் நடவடிக்கை­களை இந்­தக் காலகட்­டத்­தி­லேயே எடுக்க வேண்டும். இதற்கு இது தக்க தரு­ண­ம். இதில் வருமுன் காக்கும் அணுகுமுறை அவசியம்.