குடிமக்கள் பணிக்குழுவின் பரிந்துரைகளை முத்தரப்புப் பங்காளிகள் ஏற்றனர் வேலை, வாழ்க்கை சமநிலை மேம்பட நடவடிக்கைகள்

குடிமக்கள் பணிக்குழுவின் பரிந்துரைகளை முத்தரப்புப் பங்காளிகள் ஏற்றனர் வேலை, வாழ்க்கை சமநிலை மேம்பட நடவடிக்கைகள்

2 mins read
c3e8c345-2dc4-42b9-939c-f72fa9ad87df
-

சிங்­கப்­பூ­ரில் வேலை-தனிப்­பட்ட வாழ்க்கை சம­நி­லையை மேம் படுத்த முத­லா­ளி­க­ளுக்­குத் தேவை­யான தக­வல் வளங்­கள் கொண்ட இணை­யத்­த­ளம், வேலை­யி­டத்­தில் மன அழுத்­தத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய அம்­சங்­களை மதிப்­பி­டும் இணை­யக் கருவி உள்­ளிட்­ட­வற்றை முத்­த­ரப்­புப் பங்­காளி அமைப்­பு­கள் அறி­மு­கம் செய்­துள்­ளன.

வேலை வாழ்க்கை சம­நிலை தொடர்­பான குடி­மக்­கள் பணிக்­குழு முன்­வைத்த பரிந்­து­ரை­களை ஏற்று மனி­த­வள அமைச்சு, தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகிய முத்­த­ரப்­பு­களும் அந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளன.

எஸ்ஜி டுகெ­தர் இயக்­கத்­தின் பகு­தி­யாக அந்­தப் பணிக்­குழு கடந்த 2019ம் ஆண்டு செப்­டெம்­பர் மாதம் அமைக்­கப்­பட்­டது. அர­சாங்­க­மும் சிங்­கப்­பூ­ரர்­களும் கலந்­து­ரை­யாடி தீர்­வு­களை உரு­வாக்­கு­வது இயக்­கத்­தின் நோக்­க­மா­கும்.

பல்­வேறு பின்­ன­ணி­க­ளைக் கொண்ட 55 பேர் குழு­வில் இருந்­த­னர். அவர்­கள் முன்­வைத்த 17 தீர்­வு­களில் பன்­னி­ரண்டை ஏற்­றுக்­கொள்­வ­தாக முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் உறுதி தெரி­வித்­துள்­ளன.

பணிக்­கு­ழு­வுக்கு பாராட்டு தெரி­விக்க நேற்று இணை­யம் வழி­யாக நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப் படுத்­தும் பணி­கள் பற்றி மனி­த­வள அமைச்சு மேல்­வி­வ­ரம் அளித்­தது.

முன்­வைக்­கப்­பட்ட ஒன்­பது பரிந்­து­ரை­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன. இன்­னும் மூன்று பரிந்­து­ரை­களை நடப்­புக்­குக் கொண்டு வரும் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கிறது.

மனி­த­வள அமைச்­சர் பொறுப்­பி­லி­ருந்து தொடர்பு, தக­வல் அமைச்­ச­ராக மாறி­யுள்ள திரு­மதி ஜோச­ஃபின் டியோ நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

நீக்­குப்­போக்­கான வேலை­முறை போன்ற அம்­சங்­க­ளைப் பணிக் குழு விவா­தித்­த­தா­க­வும் அவை கொவிட்-19 சூழ­லால் தற்­போது முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

வீட்­டில் இருந்து வேலை செய்­வது தற்­போது இயல்­பு­நி­லை­யாக இருப்­ப­தால், பணிக்­கு­ழு­வின் பல யோச­னை­களை நடப்­புக்­குக் கொண்­டு­வர முடிந்­தது என்­றார் திரு­மதி டியோ.

நீக்­குப்­போக்­கான வேலை­முறை உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொள்­ளும்­படி முத­லா­ளி­களை ஊக்­கு­விக்க, முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் வேலை வாழ்க்கை தூதர்­களை நிய­மித்­துள்­ளது. பணிக்­குழு முன்­வைத்த பரிந்­து­ரை­களில் இது­வும் ஒன்று.

அத்­து­டன், வேலை- தனிப்­பட்ட வாழ்க்கை சம­நி­லைக்கு எதி­ரான சவால்­க­ளைக் களைய சிறந்த வழி­களை முத­லா­ளி­கள் பகிர்ந்­து­கொள்­வ­தற்­கான ஆத­ர­வுக் குழுக்­களை மனி­த­வள நிபு­ணர்­கள் கழ­கம் தொடங்­கி­யுள்­ளது. இவை துறை சார்ந்து இயங்­கும்.

நிகழ்ச்­சி­யில் பேசிய மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங், கிரு­மிப் பர­வல் சூழ­லில் வேலை­யை­யும் தனிப்­பட்ட வாழ்க்­கை­யை­யும் பிரித்­துப் பார்ப்­ப­தில் ஊழி­யர்­கள் சிர­மத்தை எதிர்­நோக்­கு­கின்­ற­னர் என்று ஒப்­புக்­கொண்­டார்.

நிறு­வ­னங்­க­ளின் வேலை நேரம், தன்மை ஆகி­ய­வற்­றில் வேறு­பா­டு­கள் இருப்­ப­தால், எல்­லா­வற்­றுக்­கும் ஒரே தீர்வு இருந்துவிட முடி­யாது. ஆனா­லும், வேலை வாழ்க்கை சம­நி­லையை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­கள் தொட­ரும் என்றார் அவர்.