எட்டு புளோக்வாசிகளுக்கு சரளமாக நடந்த பரிசோதனை

எட்டு புளோக்வாசிகளுக்கு சரளமாக நடந்த பரிசோதனை

2 mins read
1451187f-0678-4607-abc5-955b22bf1bf8
புக்கிட் மேரா வியூ புளோக் 125Aல் கொவிட்-19 கட்டாய பரிசோதனை செய்துகொண்ட குடியிருப்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புக்கிட் மேரா வியூ குடியிருப்பாளர்கள் அதிக நேரம் காத்திருக்கவில்லை

புக்­கிட் மேரா வியூ­வில் உள்ள எட்டு வீவக புளோக்­கு­களில் குடி­யி­ருப்­போர் நேற்று கொவிட்-19 கட்­டாய பரி­சோ­தனை செய்துகொண்­ட­னர். அவர்­கள் யாரும் நீண்ட நேரம் வரி­சை­யில் காத்­தி­ருக்­க­வில்லை.

பரி­சே­ாதனை சர­ள­மா­கத் தொடங்­கி­யது. பெரும்­பா­லா­ன­வர்கள் 20 நிமி­டங்­கள்கூட காத்­தி­ருக்­க­வில்லை என்று குடி­யி­ருப்­பாளர்­கள் கூறி­னர். நட­மாட சிர­மப்­பட்ட முதி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டது.

புளோக்­­ 116, 117, 118, 119, 124A, 124B, 125, 126 ஆகி­ய­வற்­றில் வசிப்­போ­ருக்கு அப்­ப­குதியில் மூன்று இடங்­களில் கட்­டாய பரி சோ­தனை நடத்­தப்­பட்­டது.

புக்­கிட் மேரா வியூ­வில் இருக்­கும் 119 வது புளோக்­கில் வசிக்­கும் ஒன்­பது குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 21 பேருக்­குத் தொற்று இருந்­தது தெரிய வந்­ததை அடுத்து கட்­டாய பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அப்­ப­கு­தி­யில் உள்ள சில புளோக்­குகளில் இருந்து சேக­ரிக்­கப்­பட்ட கழிவு நீரில் கிருமி எச்­சங்­கள் இருந்­த­தும் கண்டு பிடிக்­கப்­பட்­டது. அந்த எட்டு புளோக்­கு­களும், எண் 115 புக்­கிட் மேரா வியூ சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­திற்கு அருகே இருக்­கின்­றன.

இந்த நிலை­யம் சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய திறந்த இட கிரு­மித்­தொற்றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­யது. இந்­தக் குழு­மத்­தில் தொற்­றுக்கு ஆளான 70 பேர் உள்னர். கட்­டாய பரி­சோ­தனை பற்­றிய விவ­ரங்­க­ளைக் கொண்ட கையே­டு­கள், குறுஞ்செய்­தி­கள் குடியிருப்­பா­ளர்­களுக்கு முன்னதாக அனுப்­பப்­பட்­டன.

இத­னி­டையே, நேற்று பரி­சோ­தனைக்­குச் சென்­ற­வர்­களில் சிலர் சென்ற வார தொடக்­கத்­தில் தாங்­களா­கவே பரிசோத­னைக்­குச் சென்று இருந்­த­வர்­கள் என்று தஞ்­சோங் பகார் குழுத்தொகுதி நாடாளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் பெரேரா கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

திரு­வாட்டி பெரேரா, சுகா­தார அமைச்­சைக் கேட்­டுக்கொண்­டதை அடுத்து கட்­டா­யம் அல்­லாத அந்தப் பரி­சோ­தனை சென்ற செவ்­வாய்க்­கி­ழமை தொடங்கி வியா­ழக்­கி­ழமை வரை நடந்­தது. அப்­போது நீண்ட வரிசை காணப்­பட்­டது.

சென்ற வாரம்­தான் அந்தப் பரி­சோ­தனை நடந்­தது என்­றா­லும் குடி­யிருப்­பா­ளர்­கள் பல­ரும் தங்களை மீண்டும் பரி­சோ­தித்­துக்கொள்ள முடிவு செய்­த­னர்.

ஜூன் 5 முதல் ஜூன் 19 வரை அந்த எட்டு புளோக்­கு­களில் குடி­யி­ருக்­கும் மக்­க­ளு­டன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், அல்­லது அந்­தப் புளோக்கு­க­ளுக்­குச் சென்று வந்துள்­ளவர்கள், புக்­கிட் மேரா வியூ­வில் அந்த மூன்று இடங்­களில் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம்.