கொவிட்-19 தொற்றுநோய் பற்றிய பயம் பொதுமக்களைச் சூழ்ந்துள்ளது. அந்த பயத்தை எங்கு வெளிப்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இனவாத சம்பவங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
"'இந்து', 'இந்தி' எனும் சொற்களின் வேறுபாடு சிலருக்கு இன்னும் புரியாமல் இருக்கிறது. சமயத்துக்கும் மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இவர்களைப் போன்றவர்களுக்குத் தெரியவில்லை. நம் சமுதாயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை இது காட்டுகிறது என்றே சொல்வேன்.
அதே நேரத்தில் இந்தியர்களாகிய நாம் மற்றவர்களுக்கு எவ்வாறு நம்மை வெளிப்படுத்தி நம் தோற்றத்தை முன்வைக்கிறோம் என்பதும் மிக முக்கியம்.
நம்மைப் பற்றி ஸ்டிரியோடைப் (Stereotype) எனும் மாறாத, ஒரே மாதிரியான எண்ணங்களைத் தொடரவிடக்கூடாது.
நான் உருவாக்கிய இன்ஸ்டகிராம் பக்கத்தில் இந்தியர்களை முறையாக சித்திரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்
படுகிறேன். மக்களிடையே இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் அவர்கள் மத்தியில் பரிவை வளர்ப்பதை உறுதி செய்கிறேன். பரிவு, புரிதல், கனிவன்பு ஆகியவையே இனவாதத்தை ஒழிப்பதற்கான முதற்கட்டப் படிகள்.
- ஸ்டேசி தான்யா ஷாமினி, 26,
நிறுவனர், 'இந்தியன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்' இன்ஸ்டகிராம் பக்கம்

