சிங்கப்பூர் தமிழ் பண்பாட்டு மையத்தின் உறுப்பினர் நான். நமது இந்திய சமூகத்துக்குள்ளும் மற்ற சமூகத்தினருடனும் கலாசாரப் பரிமாற்றங் களை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை எங்கள் அமைப்பு ஏற்பாடு செய்கிறது.
தமிழ்ப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், சீன புத்தாண்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்வேறு இனங்களைப் பற்றிய தவறான கருத்துகளை திருத்தவும் உரையாடல்களுக்கு மையம் ஏற்பாடு செய்தது.
நிகழ்ச்சிகள் ஆங்கிலத்தில் நடைபெற்றன. எல்லா இனத்தவரும் கலந்துகொண்டார்கள். இத்தகைய முயற்சிகளை ஊக்குவிப்பது புரிந்துணர்வையும் நட்பையும் வளர்க்க உதவும்.
இனவாதம் தொடர்பான அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. தேசிய சேவையின் போது சிலர் என்னைப் பற்றி இனவாதக் கருத்து
களைக் கூறினார்கள். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் சென்று பேசினேன். அது தீர்வாக அமைந்தது. பொதுவாக, நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம் என்று தெரிந்தால் மற்றவர்கள் அவர்களின் தவறைத் திருத்திக்கொள்வார்கள்.
- விஜயக்குமார் அருள் ஓஸ்வின், 28,
கணினி பொறியாளர்

