கல்வி நிறுவனங்கள் இனவாதச் சம்பவங்களைப் பற்றி புகாரளிக்க வலுவான, நியாயமான வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். பல இளையர்களுக்கு ஏற்கெனவே இனப் பாகுபாடு பற்றி நன்கு தெரிந்திருக்கிறது. ஆனால் இனவாதத்தை எதிர்க்க முறையான வழிகள் உள்ளன என்பதையும் அவர்களுக்கு உறுதி அளிப்பது அவசியம்.
கல்வி நிலையங்களில் பாலினம், பாலியல் சார்ந்த தொல்லை கவனிக்கப்பட்டு வருகிறது. இனவாதத்திலும் கூடுதல் கவனம் செலுத்த தேவை உள்ளது. உலக அளவிலும் சிங்கப்பூரிலும், பல பல்கலைக்கழகங்களும் அமைப்புகளும் பன் முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை ஆகியவை தொடர்பான கொள்கைகளை யும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கி வருகின் றன. சிறுபான்மையினர் போன்ற பிரிவினருக்கு கிடைக்க வேண்டியவை மேலும் சம அளவில் இருப்பதை உறுதிசெய்வதற்கான முதற்படி அது. - முனைவர் லாவண்யா கதிரவேலு, 40,
இணைப் பேராசிரியர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

