இனவாதச் செயல்களைக் களைய மூன்று வழிகள் உண்டு. கற்பித்தல், ஈடுபடுத்துதல், தொடர்பு ஆகிய மூன்று படிகளில் சமூகத்தில் பிணைப்பை வலுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
எத்தனையோ கலாசார சிறப்புமிக்க விழாக்களை வெவ்வேறு சமய, இனம் சார்ந்த சமூகத் தினர் கொண்டாடுகின்றனர். அது குறித்த ஆழ்ந்த கல்வி முக்கியம். சிலரது அறியாமையைப் போக்க அவர்களைப் பல வழிகளில் ஈடுபடுத்த வேண்டும். ஒரே இனத்தவருக்குள்ளும் வெவ்வேறு இனத்தவர் இடையிலும் இன்னும் அதிகமான கலாசார அரவணைப்பு வேண்டும்.
மேலும், இனவாதப் போக்கைக் களைய உரையாடல்கள் மூலம் தொடர்புகளை மேம்படுத்தலாம். அதற்கான தளங்கள் உள்ளன.
ஒன்பீப்பல்.எஸ்ஜி, ரோசஸ் ஆஃப் பீஸ், சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க சங்கம், இன, சமய நம்பிக்கை வட்டம் போன்ற அமைப்புகளில் ஏற்பாடு செய்யப்படும் உரையாடல்களில் கலந்துகொள்ளலாம்.
உதாரணத்துக்கு ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 30 இளம் தூதர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது. அதுபோன்ற திட்டங்களில் இளையர்கள் இணைந்து செயலாற்றலாம்.
- திரு முஹம்மது இர்ஷாத், 32, நிறுவனர்,
ரோசஸ் ஆஃப் பீஸ் சமூக நல்லிணக்க அமைப்பு

