முன்பு இனவாதத்திற்கு எதிராக மிகவும் கோபத்துடன் எதிர்ப்புத் தெரிவிப்பேன். ஆனால் கோபத்தைவிட இச்சம்பவங்களைப் பொறுமை
யுடன் அணுகினால் நம் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள் என்று உணர்ந்தேன்.
சிலர் இனவாத வார்த்தைகளைக் கூறும்போது அல்லது இனவாதச் செயல்களில் ஈடுபடும்போது என்னால் முடிந்த அளவு அவர் களின் தவற்றைப் பொறுமையாக சுட்டிக் காட்ட முயற்சி செய்துள்ளேன்.
இனவாதம் மறைய கல்வி நிறுவனங்கள் பெற்றோருடன் ஒத்துழைத்து இனம் குறித்த பட்டறைகளைத் தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம். குழந்தைகளுக்கு இனத்தைப் பற்றி எவ்வாறு கற்றுத் தருவது என்பதையும், இனவாதத்தை எதிர்கொண்ட குழந்தைகளுக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது பற்றியும் பெற்றோர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.
- ரிஷிக்கா ஞானமூர்த்தி, 19, மாணவி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்

