கழிவுநீரில் கொரோனா கூறுகள்

கழிவுநீரில் கொரோனா கூறுகள்

2 mins read
5e158041-78a0-426b-994a-1944e711cdc5
84A ரெட்ஹில் லேனில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொவிட்-19 பரிசோதனை மையத்தில் நேற்று தொடங்கி நாளைவரை பரிசோதனை நடவடிக்கை இடம்பெறும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரெட்ஹில் வட்டாரத்தில் ஏழு வீவக புளோக்வாசிகளுக்கு கட்டாய கொவிட்-19 பரிசோதனை

ரெட்­ஹில் லேன், ரெட்­ஹில் குளோஸ் பகுதி­களில் ஏழு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கு­களில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கட்­டாய கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

அங்கு சில புளோக்­கு­க­ளின் கழி­வு­நீ­ரில் கொரோனா கூறு­கள் கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து இந்­ந­ட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

ரெட்­ஹில் லேனில் 81, 82, 83 ஆகிய புளோக்­கு­களும் ரெட்­ஹில் குளோ­சில் 87, 88, 89, 90 ஆகிய புளோக்­கு­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல், கொரோனா பரி­சோ­தனை செய்துகொண்டு 'தொற்று இல்லை' என முடிவு கிடைத்­த­வர்­க­ளுக்கு இப்­போ­தைய பரி­சோ­தனை கட்­டா­ய­மில்லை.

"எவ­ரே­னும் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­னால், அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­படு­வார். மேலும் கொரோனா பர­வா­மல் தடுத்து சமூ­கத்­தைப் பாது­காக்­கும் வகை­யில், அவ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு, பரி­சோ­திக்­கப்­பட்டு, தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர்," என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

அந்த புளோக்­கு­க­ளுக்கு வந்து சென்­ற­வர்­களும் அவற்­றின் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களும் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளு­மாறு ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். இது சமூ­கத்­தில் அறி­கு­றி­யற்ற தொற்று­களைக் கண்­ட­றிய உத­வும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

புளோக் 84A ரெட்­ஹில் லேனில் அமைக்­கப்­பட்­டுள்ள கூடா­ரத்­தி­லும் 89 ரெட்­ஹில் குளோ­சின் கீழ்த்­தளத்­தி­லும் நேற்று தொடங்­கிய பரி­சோ­தனை நட­வ­டிக்கை நாளை­வரை இடம்­பெ­றும்.

கட்­டா­யப் பரி­சோ­தனை நட­வடிக்கை குறித்து துண்­ட­றிக்கை விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கிறது என்­றும் பாதிக்­கப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குக் குறுஞ்­செய்தி அனுப்­பப்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

"பரி­சோ­தனை முடி­வு­க­ளுக்­காகக் காத்­தி­ருப்­போர் இயன்­ற­வரைக்­கும் சமூ­கத்­தில் கலந்­து­ற­வா­டு­வ­தைக் குறைத்­துக்­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர். அவர்­கள் தங்­கள் உடல்­ந­லத்­தைத் தொடர்ந்து கண்­கா­ணிக்க வேண்­டும். உடல்­ந­லம் குன்­றி­யுள்­ள­தாக நினைத்­தால் உடனே அவர்­கள் மருத்­துவ உத­வியை நாட வேண்­டும்," என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பாதிக்­கப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­களின் பாது­காப்­பை­யும் நல்­வாழ்­வை­யும் உறு­திப்­ப­டுத்­தும் வித­மாக முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இந்­தக் கட்­டா­யப் பரி­சோ­தனை நட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது என்று ராடின் மாஸ் தொகுதி எம்.பி. மெல்­வின் யோங் கூறி­னார்.

அவர்­களுக்­கான பரி­சோ­தனை நேரம் குறித்த தகவல் குறுஞ்­செய்தி வழி­யாக அனுப்­பப்­படும் என்­றும் அவ்­விரு தற்­கா­லி­கப் பரி­சோ­தனை மையங்­களில் ஒன்றில் பரிசோதனை செய்துகொள்ளும்படி அவர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வர் என்­றும் ஒரு ஃபேஸ்புக் பதிவு வழி­யாக திரு மெல்­வின் தெரி­வித்து இருக்­கி­றார்.

"சுற்று வட்­டா­ரத்­தில் உள்ள புளோக்­கு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள், இம்­மா­தம் 6ஆம் தேதி­யில் இருந்து 20ஆம் தேதிக்­குள் பாதிக்­கப்­பட்ட புளோக்­கு­க­ளுக்­குச் சென்­றி­ரா­விடில், இப்­போ­தைக்­குப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டிய தேவை­யில்லை," என்றார் அவர்.