வேதிப்பொருள் கசிவு: நூறு பேர் வெளியேற்றம்

1 mins read
f493907e-f682-4d54-8ed2-513e5b63d88d
பிற்பகல் 1.30 மணியளவில் குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. படம்: லியான்ஹ வான்பாவ் -

சந்­தே­கப்­ப­டும்­ப­டி­யான பொருள் கசிந்­தி­ருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து, போலிஸ் அதி­கா­ரி­கள் உட்­லண்ட்­சில் உள்ள ஒரு கொண்­டோ­மி­னி­யத்­தில் இருந்து கிட்­டத்­தட்ட நூறு பேரை வெளி­யே­றும்­படி உத்­த­ர­விட்­ட­னர்.

கசிந்­தி­ருந்த பொரு­ளில் பொது­வாக பூச்­சிக்­கொல்­லி­களில் காணப்­படும் பொருள்­கள் இடம்­பெற்று இருந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

61 ரோஸ்­வுட் டிரை­வில் எனும் முக­வ­ரி­யில் அமைந்­துள்ள ரோஸ்­வுட் சூட்ஸ் கொண்­டோ­மி­னி­யத்­தில் நிகழ்ந்த அச்­சம்­ப­வம் குறித்து நேற்றுக் காலை 9.30 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தா­கக் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது.

முதல் தளத்­தில் உள்ள ஒரு குடி­யி­ருப்­பின் மாடப் பகு­தி­யில் சிறிய அள­வில் வேதிப்­பொ­ருள் கசிந்­தி­ருந்­த­தைக் குடி­மைத் தற்­காப்பு அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர். அதி­லி­ருந்து சிறு மாதிரி சேக­ரிக்­கப்­பட்டு, சோத­னைக்கு அனுப்­பப்­பட்­டது. பின்­னர் பாதிக்­கப்­பட்ட பகுதி, மாசு­அ­கற்றி கொண்டு தூய்­மைப்­ப­டுத்­தப்­பட்­டது.

சம்­ப­வத்­தில் எவ­ரும் காய­ம­டை­ய­வில்லை. பிற்­ப­கல் 1.30 மணி­ய­ள­வில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வரும் தங்­க­ளது வீடு­க­ளுக்­குத் திரும்ப அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்.

முற்­ப­கல் 11.30 மணி­ய­ள­வில் அங்கு ஆறு தீய­ணைப்பு வண்­டி­களும் ஒரு 'ஹஸ்­மெட்' வாக­ன­மும் நின்­றி­ருந்­த­தை­யும் எவ­ரும் செல்ல முடி­யா­த­வாறு அப்­ப­குதி அடைத்து வைக்­கப்­பட்டு இருந்­த­தை­யும் கூறி­னார் அந்த கொண்­டோ­மி­னி­யத்­திற்கு அருகே வசிக்­கும் திரு சான் லிம், 26.

"அந்­தக் குடி­யி­ருப்­பிற்கு அரு­கில் வசிப்­ப­தால் சற்­றுக் கவலை அடைந்­தேன். எனது வீட்­டின் சன்­னல்­க­ளை­யும் மூட வேண்­டி­யி­ருக்­குமோ என நினைத்­தேன். ஆனால், நிலைமை கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­தாக அதி­காரி என்­னி­டம் கூறி­னார்," என்­றார் திரு சான்.