ஹெங்: நகரங்களை மறுஉருவாக்க அரிய வாய்ப்பு

ஹெங்: நகரங்களை மறுஉருவாக்க அரிய வாய்ப்பு

1 mins read
10109483-7bac-457a-9cc8-61b5e14aeea9
நகரங்கள் தொடர்ந்து மக்களை ஈர்க்கும் என்றார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழல் வருங்­கால நக­ரங்­களை வேறு­வி­த­மா­கப் கற்­பனை செய்து மறு­உ­ரு­வாக்க அரிய, தலை­ முறைக்கு ஒரு முறை வரும் வாய்ப்பு கிடைத்­தி­ருப்­ப­தாக துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார்.

நக­ரங்­கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம். ஆனால் அவை தொடர்ந்து தேவைப்­படும் என்­றும் மக்­களை ஈர்க்­கும் என்­றும் உலக நக­ரங்­கள் உச்­ச­நிலை மாநாட்­டில் பேசிய அவர் கூறி­னார்.

செயல்­தி­றன் மட்­டு­மல்­லாது மீள்­­தி­ற­னும் கொண்ட வாழக்­கூ­டிய, நீடித்த நிலைத்­தன்மை மிக்க நக­ரங்­க­ளைக் கட்­டு­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை கிரு­மிப்­ப­ர­வல் மீண்­டும் வலி­யு­றுத்தி இருப்­ப­தா­க­வும் திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

கிரு­மிப் பர­வ­லுக்­குப் பின்­ன­ரும் நக­ரம­ய­மாக்­கம் தொட­ரும் என்­றார் துணைப் பிரதமர்.