இந்திய முஸ்லிம் சமூகத் தலைவர் ஏ.ஜி. முஸ்தபா காலமானார்

இந்திய முஸ்லிம் சமூகத் தலைவர் ஏ.ஜி. முஸ்தபா காலமானார்

2 mins read
912df0ec-b246-426a-82f6-cb64e2b494dc
டன்லப் ஸ்திரீட்டிலுள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல் 2000ஆம் ஆண்டு கண்ட மேம்பாட்டுப் பணிகளுக்குப் பெரும் பங்காற்றிய மறைந்த ஹாஜி ஏ.ஜி.முஹம்மது முஸ்தபா (வலமிருந்து இரண்டாவது). கோப்புப் படம்: பெரித்தா ஹரியான். -

இர்­‌‌‌‌‌ஷாத் முஹம்­மது

சிங்­கப்­பூர் இந்­திய முஸ்­லிம் பேர­வை­யின் நிறு­வ­னர்­களில் ஒரு­வ­ரும் முன்­னாள் தலை­வ­ரும் டன்­லப் ஸ்தி­ரீட்­டி­லுள்ள வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சல் நிர்­வா­கக் குழு­வின் முன்­னாள் தலை­வ­ரு­மான ஹாஜி ஏ.ஜி. முஹம்­மது முஸ்­தபா நேற்று முன்­தி­னம் சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் கால­மா­னார். அவ­ருக்கு வயது 83. அவர் தன் மகன், மகள், பேரப்­பிள்­ளை­களை விட்­டுச் சென்­றார்.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள 19 இந்­திய முஸ்­லிம் சங்­கங்­களை ஒரே கூரை­யின்­கீழ் ஒன்­றி­ணைக்­கும் இந்­திய முஸ்­லிம் பேரவை எனும் கூட்­ட­மைப்பை 1992ஆம் ஆண்டு அமைத்த நிறு­வ­னர்­களில் அவர் ஒரு­வர். அந்­தக் கூட்­ட­மைப்பை 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்­டு­வரை தலை­வ­ரா­கத் திறம்­பட வழி­ந­டத்­தி­னார்.

தேசிய நினை­வுச் சின்­ன­மான அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­ச­லின் மாபெ­ரும் மறு­சீ­ர­மைப்­பைக் கடந்த 2000ஆம் ஆண்டு தமது 12 ஆண்டுகாலத் தலை­மைத்துவத்­தில் முன்­னெ­டுத்த மறைந்த திரு முஸ்­தபா, அந்­தப் பழம்­பெ­ரும் பள்­ளி­வா­ச­லின் கீழ்த் தளத்தை விரி­வு­ ப­டுத்தி மக்­கள் தொழு­கைக்­காக அந்த இடத்­தைப் பயன்­ப­டுத்­தும் விரி­வாக்­கத்­திற்கு முக்­கிய கார­ண­கர்த்­தா­வாக விளங்­கி­னார்.

"சமூ­கத்­திற்­குச் சேவை செய்ய வேண்­டும் என்ற அள­வு­க­டந்த விருப்­ப­மும் நிலை­யான பற்­றும் கொண்­ட­வர் திரு முஸ்­தபா. குறிப்­பா­கப் பள்­ளி­வா­சல் மூலம் அத்­த­கை­யச் சேவையை அவர் ஆற்­றி­னார். தன்­னு­டைய சிந்­த­னை­யி­லும் செய­லி­லும் வலு­வாக இருந்து பணி­கள் செய்­தார்," என்­றார் முன்­னாள் மூத்த துணை அமைச்­ச­ரும் குவைத்­துக்­கான சிங்­கப்­பூர்த் தூத­ரு­மான திரு ஜைனுல் அபி­தீன் ர‌ஷீத்.

பல இளை­யர்­க­ளைச் சமூ­கப் பணி­யாற்ற ஊக்­கு­வித்து தளம் அமைத்துத் தந்தார் திரு முஸ்­த­பா­.

"என் 20 வயது முதல் இன்­று­வரை அப்­பள்­ளி­வா­ச­லின் தொண்­டூ­ழி­ய­ரா­க­வும் பல வழி­களில் சமூ­கத் தொண்­டும் ஆற்ற மூல­த­ன­மாக இருந்­தது திரு முஸ்­த­பா­வின் ஊக்­க­மும் அவர் புகட்­டிய பாட­மும்­தான்," என்­றார் அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­சலின் தொண்டூழியப் பணிகளில் ஈடுபட்டுவரும் 48 வயது திரு அன்­வர் அலி.

அவ­ரது உடல் நேற்று நல்­ல­டக்­கம் செய்­யப்­பட்­டது.