சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு ஆலை மேம்பாட்டுக்கு $28.8 மி.

சுவா சூ காங் நீர் சுத்திகரிப்பு ஆலை மேம்பாட்டுக்கு $28.8 மி.

2 mins read
7228a9ca-62d0-4361-b3df-f0242afedbdd
மேம்பாட்டுப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2026ல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழ­மை­யான நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­களில் ஒன்று சுவா சூ காங் ஆலை. இதில் அதி­ந­வீ­னத் தொழில்­நுட்ப அம்­சத்­தைப் பொருத்­தும் மேம்­பாட்­டுப் பணிக்­காக $28.8 மில்­லி­யன் ஒதுக்­கப்­ப­டு­வ­தாக பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் நேற்று அறி­வித்­தது.

வரு­டாந்­திர மாநா­டான 'சிங்­கப்­பூர் அனைத்­து­லக தண்­ணீர் வாரம் 2021' நேற்று இணை­யம் வழி நடந்­த­போது ஆலை­யின் மேம்­பாட்­டுப் பணி குறித்து அறி­விக்­கப்­பட்­டது.

சுவா சூ காங் நீர் சுத்­தி­ரிப்பு ஆலை­யில் அமைந்­துள்ள கட்­ட­டங்­களும் சாத­னங்­களும் 1981ஆம் ஆண்­டுக்­கும் முந்­தி­யவை. இந்­நிலை­யில் புதுப்­பொ­லிவு தரும் பணி­கள் அடுத்த ஆண்டு தொடங்­கும் என்­றும் 2026ல் முடி­வ­டை­யும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேம்­பாட்­டுப் பணி­கள் முடி­வடைந்த நிலை­யில் தண்­ணீர் சுத்­திகரிப்­புக்­கான புதிய தொழில்­நுட்­பங்­கள் ஆலை­யில் அமைந்­தி­டும்.

அத்­து­டன் உட­னுக்­கு­டன் சாத­னங்­க­ளின் செயல்­தி­ற­னைக் கண்­கா­ணித்து முன்­னு­ரைக்­கும் உணரி­கள், காணொளி பகுப்­பாய்வு திறன்­க­ளு­டைய கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் போன்ற அறி­வார்ந்த தொழில்­நுட்ப அம்­சங்­களும் பொருத்­தப்­படும்.

மேற்கு வட்­டார நீர்ப்­பி­டிப்­புப் பகு­தி­க­ளி­லி­ருந்து வரும் தண்­ணீரை, நாள் ஒன்­றுக்கு 80 மில்­லி­யன் கேலன்­கள் எனச் சுத்­தி­கரிக்­கும் ஆற்­றலை சுவா சூ காங் ஆலை பெற்­றுள்­ளது.

அதி­ந­வீன தண்­ணீர் சுத்­தி­கரிப்­புத் தொழில்­நுட்­பங்­கள் கொண்ட வளா­க­மாக உரு­மா­று­வது, சுவா சூ காங் நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­யின் செயல்­பாடு, பரா­ம­ரிப்பு, பாது­காப்பு போன்­ற­வற்­றைப் பெரி­தும் மேம்­ப­டுத்­தும் என்­றது கழ­கம்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ, நேற்­றைய மாநாட்­டில் கலந்­து­கொண்­டார். உல­கெங்­கும் தண்­ணீர் பாது­காப்பு என்­பது நீண்­ட­கா­ல­மாக நில­வி­வ­ரும் ஒரு பிரச்­சினை என்று தமது தொடக்க உரை­யில் அவர் குறிப்­பிட்­டார். குறிப்­பாக, மக்­கள்­தொகை வளர்ச்­சி­யா­லும் பரு­வ­நிலை மாற்­றத்­தா­லும் நீர் வளங்­கள் மீதுள்ள அழுத்­தம் கூடு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

குறைந்த கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­து­டன் நீர் தொடர்­பான புதிய தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்­கு­வ­தன் மூலம் சிங்­கப்­பூர் அதன் தண்­ணீர் பாது­காப்பை மேம்­படுத்­து­வ­தா­கக் கூறப்­பட்­டது.