ரெட்ஹில் வட்டாரத்தில் உள்ள சமூக மையமான உடற்குறையுள்ளோருக்கான நட்பார்ந்த வளாகத்தில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதை அடுத்து அங்கு உள்ள ஒரு கட்டடமும் பொது இடங்களும் சுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஊழியர் உடற்குறையுள்ளோருக்கான நட்பார்ந்த வளாகத்தில் உள்ள அகாடமி கட்டடத்தில் பணிபுரிந்தவர் என்று அரசாங்க அமைப்பான எஸ்ஜி எனேபல் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.
119 புக்கிட் மேரா வியூவில் உள்ள புதிய கொவிட்-19 குழுமத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஐவரில் இந்த 63 வயது ஆடவரும் ஒருவர்.
உடற்குறையுள்ளோருக்கான நட்பார்ந்த வளாகத்தை எஸ்ஜி எனேபலும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் இணைந்து நிர்
வகிக்கின்றன.
வளாகத்தின் 'நெஸ்ட்' கட்டடத்தில் உள்ள தகவல், வாழக்கைத் தொழில் நிலையம் நேற்று முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை மூடப்படும். அகாடமி கட்டடத்தில் உள்ள சில கடைகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்டியுசி ஃபேர்பிரைஸ், புரோஃபெசர் புரோன் உணவகம், சம்சுவீ விநியோக, சேவைகள் நிறுவனம் ஆகியவை அவற்றில் அடங்கும். இந்தக் கடைகளுக்குச் செல்லத் திட்டம் கொண்டிருப்போர் அவை இயங்கும் நேரத்தை உறுதி செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று எஸ்ஜி எனேபல் நினை
வூட்டியது.
அகாடமி கட்டடத்தில் பயிற்சி வசதிகளும் உள்ளன.
ஆனால் பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் நடுப்பகுதியிலிருந்து இணையம் மூலம் நடத்தப்படு
கின்றன.
எஸ்ஜி எனேபலின் சேவை தேவைப்படுவோர் அந்த அமைப்புடன் இணையம் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஜி எனேபலால் நிர்வகிக்கப்படும் திட்டங்களுக்கும் சேவை
களுக்கும் விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அவற்றுக்கான படிவங்களையும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க எஸ்ஜி எனேபல் இணையப்பக்கத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரியையும் மின்னிலக்கச் சேவைத் தளத்தையும் பயன்படுத்தலாம். வேலை தேடுவோர் employment@sgenable.sg எனும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்
படுத்தலாம் அல்லது அமைப்பின் இணையப்பக்கத்துக்குச் செல்லலாம்.
மற்ற திட்டங்கள் அல்லது சேவைகள் தொடர்பான மேல் விவரங்களுக்கு 1800-8585-885 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது contactus@sgenable.sg எனும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம். மேல் விவரங்களுக்கு எஸ்ஜி எனேபலின் இணையத்தளத்தை நாடலாம்.
இதற்கிடையே, 166 புக்கிட் மேரா சென்ட்ரலில் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் ஊழியர்களுக்கும் அங்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கும் கொவிட்-19 பரிசோதனை நேற்று சுமுகமான முறையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பேரங்காடிக்குச் சென்ற சிலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்தப்
பரிசோதனை நடத்தப்பட்டது.
இதற்காக புளோக் 125ஏ புக்கிட் மேரா வியூவில் தற்காலிக பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டது.
இம்மாதம் 3ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை அந்தப் பேரங்காடிக்குச் சென்றவர்களுக்கும் அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
கிருமிப் பரவலைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

