நேற்று நண்பகல் நிலவரப்படி
சிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,448ஆக அதிகரித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ள 18 பேரில் 15 பேருக்குச் சமூக அளவில் கிருமித்தொற்று ஏற்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதியில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த மூவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்கள் சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
இந்நிலையில், கொவிட்-19
கிருமித்தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 44 வயது ஆடவர் மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவருடன் சேர்த்து சிங்கப்பூரில் கொரோனா காரணமாக 35 பேர் மாண்டுவிட்டனர்.
மரணமடைந்த 35வது நபர் கடந்த மாதம் 25ஆம் தேதியன்று அலெக்சாண்ட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது மறுநாள் உறுதி செய்யப்பட்டது.
கொவிட்-19 தடுப்பூசியை அவர் போட்டுக்கொள்ளவில்லை என்றும் அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மாண்ட ஆடவரின் குடும்பத்துடன் அலெக்சாண்ட்ரா மருத்துவமனை தொடர்புகொண்டு அவர்
களுக்குத் தேவையான உதவி
களைச் செய்து வருவதாகவும் அமைச்சு கூறியது.

