18வது முறையாக மின்னற்படை பட்டாளத்துக்குக் கிடைத்த கௌரவம்

18வது முறையாக மின்னற்படை பட்டாளத்துக்குக் கிடைத்த கௌரவம்

1 mins read
8a90a3dd-0f09-49dd-969c-db566c1d60f0
சாஃப்ட்டி ராணுவப் பயிற்சிக் கழகத்தில் ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் ஆயுதப் படை தினத்தின்போது முதலாவது மின்னற்படை பட்டாளம் கௌரவிக்கப்படும். படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் ஆகச் சிறந்த ராணு­வப் போர்ப் பிரி­வாக தொடர்ந்து 18வது முறை­யாக முதலாவது மின்னற்படைப் பட்­டா­ளம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தலை­சி­றந்த பிரி­வாக அது மொத்­தம் 35 முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக அப்­பி­ரி­வுக்கு வெளி

­நா­டு­க­ளுக்­குச் சென்று பயிற்சி செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும், தனது வீரர்­க­ளின் வேகம், துரி­தம் ஆகி­யவை துளி­ய­ள­வும் குறைந்­து­வி­டா­தி­ருக்க அப்­பி­ரிவு தனது பயிற்­சி­மு­றையை மீண்­டும் வடி­வ­மைத்து அதன்­படி செயல்­பட்­டது என்று அப்­படைப்பி­ரி­வின் தலை­வ­ராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்­பேற்ற லெஃப்டினெண்ட் கர்­னல் கூ காய் சியோங் கூறி­னார். உதா­ர­ணத்­துக்கு, வழக்­க­மாக புருணை காடு­களில் நடத்­தப்­படும் சில பயிற்­சி­கள் சிங்­கப்­பூ­ரி­லேயே ஏழு நாட்­க­ளுக்கு நடை­பெற்­றன.

இதன்­மூ­லம் வீரர்­க­ளுக்­கான பயிற்சி­யின் தீவி­ரம், வீரர்­க­ளின் போர்த் திறன் ஆகி­யவை தொடர்ந்து நிலை­நாட்­டப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார். இப்­பி­ரிவு அடுத்த மாதம் 1ஆம் தேதி­யன்று நடை­பெ­றும் ஆயு­தப் படை­கள் தின அணி­வ­குப்­பின்­போது கௌர­விக்­கப்­படும்.