தொழில்நுட்ப உத்வேகம் பெறும் சிங்கப்பூர் போலிஸ் படை

தொழில்நுட்ப உத்வேகம் பெறும் சிங்கப்பூர் போலிஸ் படை

2 mins read
ef0774b1-83cd-46ac-a9cf-1c48d0a25505
போலிஸ் அதிகாரிகளின் திறன் உத்திப் பயிற்சியை மேம்படுத்த உதவும் புதிய யதார்த்த, பகுப்பாய்வுஅமைப்புமுறையில் இதுபோன்ற எந்திரக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முன்­க­ளக் காவல் பணி, காவ­லர் பயிற்சி, கண்­கா­ணிப்பு, சமூ­கத்­தைச் சென்­ற­டை­தல் போன்ற பல்­வேறு அம்­சங்­களில் உதவ மேலும் அதி­க­மான போலிஸ் கேம­ராக்­கள், ஆளில்லா வானூர்­தி­கள், பயிற்சி எந்­தி­ரங்­கள் எனத் தொழில்­நுட்ப ரீதி­யாக சிங்­கப்­பூர் போலிஸ் படை வலுப்­பெ­ற­வுள்­ளது. நேற்று நடை­பெற்ற வரு­டாந்­திர போலிஸ் பணித்­திட்­டக் கருத்­த­ரங்­கில் இது அறி­விக்­கப்­பட்­டது.

போலிஸ் கேம­ராக்­கள் 90,000க்கும் மேற்­பட்­டவை ஏற்­கெ­னவே பொருத்­தப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் அவற்­றின் உத­வி­யு­டன் 5,000க்கும் மேற்­பட்ட குற்­றச்­செ­யல்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முடிந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

புதிய பொது வீட­மைப்பு புளோக்­கு­கள், உண­வங்­காடி நிலை­யங்­கள், போக்­கு­வ­ரத்­துப் பாதை­கள் ஆகி­ய­வற்­றில் மேலும் அதி­க­மான கேம­ராக்­கள் பொருத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

நகர, அக்­கம்­பக்க வட்­டா­ரங்­களில் பொருத்­தப்­படும் கேம­ராக்­கள், காணொ­ளிப் பகுப்­பாய்வு ஆற்­ற­லு­டை­ய­தாக இருக்­கும். எதிர்­பா­ராத கூட்­டம், நடத்­தை­யில் வன்­முறை போன்­ற­வற்றை உடனே கண்­ட­றி­யும் திறனை இக்­கே­ம­ராக்­கள் பெற்­றி­ருக்­கும்.

அதி­க­ரிக்­கப்­படும் ஆளில்லா வானூர்­தி­கள் மூலம் கண்­கா­ணிப்பு, ரோந்­துப் பணி, சம்­ப­வங்­க­ளைத் தொலை­வி­லி­ருந்து காணு­தல் போன்­ற­வற்­றுக்­குப் பய­னா­கும்.

புதிய துப்­பாக்­கி­கள், உட­லில் அணி­யக்­கூ­டிய கேம­ராக்­கள் ஆகி­ய­வற்­றை­யும் போலிஸ் அதி­கா­ரி­கள் பெற­வுள்­ள­னர். சிங்­கப்­பூர் போலிஸ் படை கொள்­ளை­நோய் சூழ­லில் கொண்­டி­ருந்த கடப்­பாடு குறித்து கருத்­த­ரங்­கின்­போது சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம் பாராட்­டிப் பேசி இருந்­தார்.

கொள்கை ஆய்­வுக் கழ­கம் சென்ற ஆண்டு நடத்­திய கணக்­கெ­டுப்பை மேற்­கோள் காட்­டிய அவர், அதில் பங்­கேற்­ற­வர்­களில் 87 விழுக்­காட்­டி­ன­ருக்கு போலி­சார் மீது நம்­பிக்கை உள்­ளது என்று கூறி­யி­ருந்­த­தைப் பகிர்ந்­து­கொண்­டார்.

பொது­வாக சிங்­கப்­பூர் போலிஸ் படை­யும் உள்­து­றைக் குழு­வும் சந்­திக்­கும் சவால்­க­ளுக்­கி­டையே மக்­கள் அவர்­கள் மீது கொண்­டுள்ள அதி­க­ளவு நம்­பிக்­கை­யைக் கட்­டிக்­காப்­பது கடி­ன­மென்­றா­லும் தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

இத்­த­கைய சவால்­களை எதிர்­கொள்ள உதவ அதி­கா­ரி­களில் மேலும் பல­ருக்கு பயங்­க­ர­வா­தம் தொடர்­பான திறன் உத்­திப் பயிற்­சி­கள் வழங்­கப்­படும் என்­றார்.

"பொது­மக்­க­ளைப் பாது­காக்­க­வும் குற்­றச்­செ­யல்­களை எதிர்க்­க­வும் நாம் நம்­மால் முடிந்த அனைத்­தை­யும் செய்ய வேண்­டும். அதே வேளை­யில், இனம், சம­யம், செல்­வம், சமூக அந்­தஸ்து என எதை­யும் பாரா­மல் நமது பொறுப்­பைப் பார­பட்­ச­மின்றி ஆற்­ற­வேண்­டும்," என்­றார்.