அமைச்சர் சண்முகம் விடுத்த சவாலை 'பிஎஸ்பி' ஏற்றுள்ளது

அமைச்சர் சண்முகம் விடுத்த சவாலை 'பிஎஸ்பி' ஏற்றுள்ளது

2 mins read
299d4ea3-73cb-47fb-823a-16cea18bb623
-

வெளி­நாட்­டி­னர் வேலை­வாய்ப்­புக் கொள்­கை­கள் பற்­றி­யும் 'சீக்கா' எனப்­படும் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான முழுமை­யான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு பற்­றி­யும் விவா­திப்­ப­தற்­கான சவாலை சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி (பிஎஸ்பி) ஏற்­ப­தாக தொகு­தி­யில்லா நாடாளு­மன்ற உறுப்­பி­னர் லியோங் மன் வாய் தெரி­வித்­துள்­ளார்.

விவா­தத்­திற்கு ஆயத்­த­மா­கும் பொருட்டு இவை தொடர்­பான கூடு­தல் தக­வல்­களை ஜூலை­யில் நாடா­ளு­மன்­றம் கூடும்­போது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எதிர்க்­கட்சி பெறும் என்­றும் அவர் தம் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்டு உள்­ளார்.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக பொருத்­த­மான தீர்­மா­னம் ஒன்­றைத் தாக்­கல் செய்­வது குறித்து பிஎஸ்பி முடிவு செய்­யும் என்­றும் அத­னைத் தொடர்ந்து விவா­தத்­திற்­கான தேதியை முடிவு செய்­ய­வேண்­டி­யது மன்ற நாய­க­ரின் பொறுப்பு என்­றும் திரு லியோங் கூறி­யுள்­ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை வழங்­கப்­பட்­டுள்ள 'எம்ப்­ளாய்­மெண்ட் பாஸ்', 'எஸ் பாஸ்', வேலை அனு­மதி அட்டை போன்­ற­வற்­றின் எண்­ணிக்கை தொடர்­பான கேள்­வி­க­ளைத் தமது கட்சி எழுப்­பும் என்று அவர் கூறி­னார்.

"நமது வேலைச் சூழல் தொடர்­பான எல்­லா­வித தர­வு­க­ளை­யும் தக­வல்­க­ளை­யும் தெரி­விக்க வேண்­டும் என்­பது பொது­மக்­களின் நாட்­ட­மாக உள்­ளது. சில துறை­களில் நியா­யத்­திற்­குப் புறம்­பான வேலை நிய­ம­னங்­கள் கார­ண­மாக நமது உள்­ளூர் ஊழி­ய­ர­ணி­யில் வேலை­வாய்ப்­புப் பற்­றாக்­குறை நில­வு­வது பற்றி வருந்­து­கி­றோம்," என்­றார் அவர்.

இது தவிர, இந்­தியா, சீனா, ஆஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளைச் சேர்ந்­தோர் பொது­வாக இடம்­பெற்­றி­ருக்­கும் வேலை­கள் மற்­றும் தொழில்­து­றை­கள் பற்­றிய விவ­ரங்­க­ளைக் கேட்­பது போன்­றவை நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­ப­வி­ருக்­கும் கேள்­வி­க­ளின் வரைவை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்­வை­யிட்­டது.

'சீக்கா' எனப்­படும் சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான முழு­மை­யான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு, சில பிரி­வி­ன­ரால் குறை­கூ­றப்­பட்டு வரு­கிறது.

உள்­ளூர் மக்­க­ளின் வேலை­வாய்ப்­பு­களை இந்­திய நாட்­ட­வர்­கள் தட்­டிப் பறிக்க இந்த ஒப்­பந்­தம் வகை செய்­வ­தாக குறை­கூ­றப்­படும் பிரச்­சி­னையை பிஎஸ்பி பல சந்­தர்ப்­பங்­களில் எழுப்பி இருக்­கிறது. இது­பற்றி கடந்த மாதம் மன்­றத்­தில் பேசிய அமைச்­சர் சண்­மு­கம், சீக்கா பற்றி பல கட்­டுக்­க­தை­கள் உல­வு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"சீக்கா என்­பது பிரச்­சி­னைக்­கு­ரி­யது என்று இங்­குள்ள எவ­ரா­வது கரு­தி­னால் அதற்­கான தீர்­மா­னத்தை வரைந்து, வெளிப்­ப­டை­யாக விவா­தம் செய்­வ­தன் மூலம் சிங்­கப்­பூ­ரர்­கள் அடைந்­தது பலனா அல்­லது இழப்பா என்­பதை நாம் தெரிந்­து­கொள்ள முடி­யும்," என்று அப்­போது கூறி­யி­ருந்­தார்.

மேலும், அமைச்­சர் சண்­மு­கம் திரு லியோங்கை நோக்கி, "சீக்கா பற்றி விவா­திப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை முன்­வைக்­கு­மாறு உங்­களை அழைக்­கி­றேன். சீக்கா பற்றி வெளி­யான கருத்­து­களில் பெரும்­பா­லா­னவை பொய் என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­யும்," என்­றும் குறிப்­பிட்­டி­ருந்­தார்.