தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் $5.4 பில்லியனில் புதிய ஆலை: 1,000 உயர்மதிப்பு வேலைகள் உருவாக்கம்

1 mins read
12570c3a-72d2-4a84-ba37-aca0d8b262ef
-

அனைத்­து­லக அள­வில் சில்­லு­களுக்­குத் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்ள நிலை­யில் 'குளோ­பல்­ஃப­வுண்ட்­ரீஸ்' அதன் பகுதி மின்­கடத்தி (semiconductor) உற்­பத்தி ஆற்­றலை சிங்­கப்­பூ­ரில் வளர்த்­துக்­கொள்­ளும் திட்­டத்­து­டன் $5.4 பில்­லி­யன் மதிப்­பி­லான முத­லீடு செய்­ய­வுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கட்­டப்­படும் நிறு­வனத்­தின் புதிய ஆலை வழி சுமார் 1,000 பேருக்கு வேலை­கள் உரு­வாக்­கித் தரப்­படும் என்று நிறு­வனம் நேற்று தெரி­வித்­தது.

இந்த வேலை­களில் சுமார் 95%, கரு­வித் தொழில்­நுட்­பர், செயல்­மு­றைத் தொழில்­நுட்­பர், பொறி­யா­ளர் போன்ற உயர்மதிப்­பு­டை­ய­வை­யாக இருக்­கும். சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தின் பங்­கா­ளித்­து­வம், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் இணை முத­லீ­டு­கள் ஆகி­ய­வற்­று­டன் நிறு­வ­னம் இந்த முத­லீட்­டைச் செய்­ய­வுள்­ளது.

மின்­ன­ணு­வி­யல், ரசா­ய­னங்­கள், மருந்­துத் துறை­களில் உள்ள பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் முத­லீடு செய்ய ஆர்­வம் காட்­டி­வரும் நிலை­யில், 'குளோ­பல்­ஃப­வுண்ட்­ரீஸ்' நிறு­வ­னம் உறு­தி­செய்­துள்ள இந்த முத­லீட்­டுத் திட்­டமே அண்மைய ஆண்­டு­களில் ஆக அதி­க­மா­னது.

தற்­போது கட்­டப்­பட்டு வரும் ஆலை, உட்­லண்ட்ஸ் வளா­கத்­தில் அமைந்­தி­ருக்­கும். 2023ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தில் அதன் உற்­பத்தி வேலை­க­ளைத் தொடங்கி­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. 2024ன் முற்­பா­தி­யில் ஆலை அதன் முழு ஆற்­ற­லில் இயங்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.