தன் பேரனின் 14 வயது நண்பனுடன் நட்பு கொண்ட 60 வயது ஆடவர், வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் கூற இளையரைத் தினமும் சந்தித்து வந்தார். இளையரின் தந்தையே அந்த ஆடவரை அணுகி, தம் மகனுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
அந்த இளைஞனைத் தன் சொந்த பேரனாகக் கருதுவதாகக் கூறிய அந்த ஆடவர், இளைஞனுடன் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் படிக்கட்டுத் தளம் ஒன்றில் பாலியல் செயலில் ஈடுபட்டார்.
ஆடவருக்கு நேற்று 20 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இளைஞனுடன் கொண்ட நட்புறவில் ஒருவருக்கொருவர் பாலியல் ரீதியாக உதவிக்கொள்ளலாம் என்று தங்களுக்குள் இருந்த உறவை ஆடவர் தவறாகப் புரிந்துகொண்டதாக ஆடவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.
பாலியல் செயலில் ஈடுபடலாம் என்று ஆடவர் கேட்டபோது இளைஞன் மறுத்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், ஆடவர் வற்புறுத்தி இளைஞனின் கால்சட்டையை அகற்றி பாலியல் செயலில் சுமார் 30 வினாடிகளுக்கு ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

