புக்கிட் மேரா வியூ, பியோ கிரசென்டில் பரிசோதனை நிறைவு: ஐவருக்கு தொற்று

புக்கிட் மேரா வியூ, பியோ கிரசென்டில் பரிசோதனை நிறைவு: ஐவருக்கு தொற்று

2 mins read
c0890766-edb1-4bbb-9feb-1598920e0b6a
புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, மூத்த குடியிருப்பாளர்களின் சிரமத்தைத் குறைத்து அவர்களிடத்தில் காய்கறிகளைச் சென்று சேர்க்க அடித்தள அமைப்புகள் மாற்று ஏற்பாட்டைச் செய்தன. ஃபேர்பிரைஸ் ஆன் வீல்ஸ் வேன், புக்கிட் மேரா வியூ புளோக் 123 கார்நிறுத்தும் இடத்துக்கு காய்கறிகளையும் மளிகைப் பொருட்களையும் சுமந்துவந்தது. படம்: ஹெண்டர்சன் சமூக மன்றம் -

புக்­கிட் மேரா வியூ, பியோ கிரெ­சண்டில் வட்­டா­ரங்­களில் வசிப்­ப­வர்­கள், பணி­யாற்­று­ப­வர்­கள், அல்­லது அங்கு சென்­ற­வர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட கண்­கா­ணிப்பு பரி­சோ­த­னை­க­ளின் முடி­வில் ஐந்து பேருக்கு கிரு­மித்தொற்று உறுதி செய்­யப்­பட்­டி­ருக்­கிறது.

அவர்­கள் ஐந்து பேரும் புக்­கிட் மேரா வியூ­யில் காணப்பட்டதாக சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் கூறப்­பட்­டது. அந்த வட்­டா­ரத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­கள் சென்ற திங்­கட்­கி­ழமை நிறை­வு­பெற்­றன.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை முடி­வ­டைந்த பியோ கிர­சென்ட் பரி­சோ­த­னை­களில் யாருக்­கும் தொற்று கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

புக்­கிட் மேரா வியூ புளோக்­கு­கள் 116, 117, 118, 119, 124ஏ, 124பி, 125, 126 ஆகி­ய­வற்­றின் குடி­யி­ருப்­பா­ளர்­கள், அங்கு சென்று வந்­த­வர்­கள் என மொத்­தம் 2,133 பேர் பரி­சோ­திக்­கப்­பட்­ட­னர்.

தொற்று கண்ட ஐந்து பேரில் 20 லெங்­கோக் பாரு­வில் உள்ள உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான நட்­பார்ந்த வளா­கத்­தில் (Enabling Village) பணி­யாற்­றும் 69 வயது துப்­பு­ர­வுத் தொழி­லா­ள­ரும் ஒரு­வர்.

இன்­னும் இரண்டு பேருக்கு புக்­கிட் மேரா வியூ சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யத் தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்பு உள்­ளது. மேலும் ஒரு­வர் 119 புக்­கிட் மேரா தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்பு உள்­ள­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது.

13 பேருக்கு புதி­தாக தொற்று

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 22 பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­தாக சுகா­தார அமைச்சு கூறி­யது.

இவர்­களில் 13 பேர் சமூ­கத்­தில் உள்­ள­வர்­கள்; 9 பேர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள்.

சமூ­கத்­தில் தொற்று கண்­ட 13 பேரில் மூவ­ருக்கு கிரு­மித் தொற்­றிய மற்­ற­வர்­க­ளு­டன் இது­வரை தொடர்பு ஏது­மில்லை. மற்ற 10 பேரும் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­புள்­ள­வர்­கள்.

அவர்­களில் எட்டு பேர் ஏற்­கெ­னவே தனி­மை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். மற்ற இரு­வ­ரும் பரி­சோ­த­னை­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­னர். ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் யாருக்­கும் தொற்­றில்லை.

சிங்­கப்­பூ­ரில் கிருமி தொற்­றி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை தற்­போது 62,470 ஆகி­யுள்­ளது.

புதிய தொற்­றுக்­ கு­ழு­மங்­கள்

சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு புதிய தொற்றுக் குழுமங்கள் அறிவிக்கப்பட்டன.

ஒன்று, 90 ரெட்ஹில் குளோசில் உள்ளது. அங்கு 69 வயது மாது உட்பட மூவருக்கு தொற்று கண்டுள்ளது. மற்றொன்று கடந்த 14ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட வெளிநாட்டு இல்லப் பணியாளருடன் தொடர்புடையது.