தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்னமும் தொடரும் பயங்கரவாத மிரட்டல்

2 mins read
825d8e20-b54b-4615-ad56-8c0508f0c037
-

உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிக்கை

சிங்­கப்­பூ­ருக்கு பயங்­க­ர­வாத மிரட்­டல் தொடர்ந்து அதி­க­மாக இருந்து வரு­கிறது என்று உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 சூழ­லில் பயங்­க­ர­வாதக் குழுக்­கள் தொடர்ந்து இணை­யத்­தில் தங்­கள் ஆதிக்­கத்தை விரிவுப­டுத்தி வரு­வ­தாக அது தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ருக்கு உட­னடி பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல் பற்­றிய திட்­ட­வட்­ட­மான தக­வல் எது­வும் இப்­போ­தைக்கு வேவுத்­துறை மூலம் தெரிய வர­வில்லை என்­றா­லும் இரண்டு சிங்­கப்­பூர் இளை­யர்­கள் அரங்­கேற்­ற­வி­ருந்த பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தலை தான் தவிர்த்­து­விட்­டதை அந்­தத் துறை சுட்­டி­யது.

அந்­தச் சம்­ப­வங்­கள் சுய தீவி­ர­வாத மனப்­போக்கை வளர்த்­துக் கொண்ட தனிப்­பட்­ட­வர்­க­ளால் ஏற்­படக்­கூ­டிய மிரட்­டல் உண்­மை­யிலேயே இருந்து வரு­கிறது என்­பதையே காட்­டு­வ­தாக 'சிங்­கப்­பூர் பயங்­க­ர­வாத மிரட்­டல் மதிப்­பீட்டு அறிக்கை' என்ற தன் அறிக்­கை­யின் மூன்­றாம் பதிப்­பில் அந்­தத் துறை தெரி­வித்து இருக்­கிறது.

இந்த அறிக்கை ஒவ்­வொரு இரண்­டாண்­டுக்­கும் ஒரு முறை வெளி­யி­டப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரி­லும் இந்த வட்­டா­ரத்­தி­லும் நில­வும் பாது­காப்­புச் சூழலை எடுத்­துச் சொல்லி சிங்­கப்­பூ­ரர்­களை விழிப்­பூட்­டு­வது அந்த அறிக்­கை­யின் நோக்­கம்.

உள்­ளூ­ரில் பெரும்­பா­லும் இணை­யம் மூலம் சுயமாக தீவி­ர­வாத மனப்­போக்கை வளர்த்­துக்கொள்­ளும் தனிப்­பட்­ட­வர்­கள் மூல­மா­கவே பயங்­க­ர­வாத மிரட்­டல் உரு­வா­வதாக அந்­தத் துறை சுட்­டி­யது.

ஐஎஸ்­ஐ­எஸ், அல்காய்தா போன்ற உலகளாவிய பயங்­க­ர­வாத அமைப்பு­களின் தலை­வர்­கள் மர­ண­மடைந்­து­விட்­டா­லும் அவற்­றுக்கு பின்­ன­டைவு ஏற்­பட்டுள்ளது என்­றா­லும் அவை மீள்­தி­ற­னு­டன் கூடி­யவை என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

கொவிட்-19 சூழ்­நி­லை­யில் அந்த அமைப்­பு­கள் சமூக ஊட­கத்­தில் தங்­கள் பிர­சார, ஆட்­சேர்ப்பு முயற்­சி­களை முடுக்­கி­விட்டு இருக்­கின்­றன என்­பதை அந்­தத் துறை சுட்டி­யது. சிங்கப்பூரில் பயங்­க­ர­வா­தம் தொடர்­பான நடத்­தை­க­ளுக்­காக 2015 முதல் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் 54 பேர் தடுத்து வைக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

அவர்­களில் 32 சிங்­கப்­பூ­ரர்­கள், 12 வெளி­நாட்­டி­ர் உள்­ளிட்ட 44 பேர் சுய­மாக தீவி­ர­வாத மனப்­போக்கை வளர்த்­துக் கொண்­ட­வர்­கள் என்று அறிக்கை குறிப்­பிட்­டது.

2019 ஜன­வரி முதல் தடுத்து வைப்பு அல்­லது கட்­டுப்­பாட்டு உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்டவர்களில் 10ல் 9 பேர்- அதாவது 16 பேரில் 14 பேர் சுய­மாக தீவி­ர­வாத மனப்­போக்கை வளர்த்­துக்கொண்­ட­வர்­கள் என்­பதையும் இந்­தத் துறை சுட்டி­யது.

அவர்­களில் 10 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள் நான்கு பேர் வெளிநாட்­டி னர் ஆவர்.