இனவாதப் பேச்சு; மாதுக்கு நான்கு வாரம் சிறை

இனவாதப் பேச்சு; மாதுக்கு நான்கு வாரம் சிறை

2 mins read
7e051fd9-9a21-41f5-a189-cbd296b76da8
-

பேருந்து ஒன்­றில் ஒரு மாதை வசை­பாடி இன­வாத ரீதி­யில் அவ­ம­தித்த, அவ­தூ­றாக பேசிய ஒரு மாதுக்கு நேற்று நான்கு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சித்தி ஆயிஷா ஜஃபார், 40, என்ற அந்த மாது, திரு­வாட்டி தன­லட்­சுமி செல்­வம், 33, என்ற மாதை வசை­பா­டி­ய­போது 'முட்­டாள் இந்­தி­யர்' என்று குறிப்­பிட்­டார்.

அந்­தச் சம்­ப­வத்­தைக் காட்­டும் இரண்டு காணொளி­கள் நீதி­மன்­றத்­தில் காட்டப்பட்­டன.

இணையம் மூலம் முன்­னி­லை­யான அந்த மாது அப்­போது தன் தலை­யைத் தாழ்த்­திக்­கொண்­டார்.

வழக்கை விசா­ரித்து தண்­டனை விதித்த மாவட்ட நீதி­பதி, இத்­தகைய குற்­றச்­செ­ய­லுக்கு நம் சமூ­கத்­தில் இடமே கிடை­யாது என்று தெரி­வித்­தார்.

இந்­தச் சம்­ப­வம் சென்ற ஆண்டு செப்­டம்­பர் 3ஆம் தேதி நிகழ்ந்­தது. திரு­வாட்டி தன­லட்­சுமி துவாஸ் பேருந்து சந்­திப்பு நிலை­யத்­தில் எண் 182 பேருந்­தில் ஏறி­னார்.

ஒலிச்­சா­த­னத்­தைக் காதில் பொருத்­திக்­கொண்டு பாட்டு கேட்­டுக்­கொண்டு வந்­தார்.

அப்­போது அவரைச் சுட்­டிக்­காட்டி சித்தி ஆயிஷா முறைத்­தார். பாதிக்­கப்­பட்­ட­ மாது எடுத்த இரண்டு காணொ­ளி­கள் நீதி­மன்­றத்­தில் காட்­டப்­பட்­டன.

'உன் இத­ய­மும் கறுப்பு, எல்­லாமே கறுப்பு; முட்­டாள் இந்­தி­யர்­கள், நீ ஓர் இந்­தி­யர், அட்­டைக் கறுப்பு; உன் நிறத்தை வெறுக்­கிறேன்; உன் முகத்­தைப் பிடிக்­க­வில்லை' என்று அந்த மாது கூறி­யதை ஒரு காணொளி காட்­டி­யது.

திரு­வாட்டி தன­லட்­சுமியை சிறு­பான்­மை­யி­னத்­த­வர் என்று சித்தி ஆயிஷா திட்­டி­ய­தும் ஒரு காணொ­ளி­யில் தெரிந்­தது.

பாதிக்­கப்­பட்ட மாது போலிசை அழைத்­தார். சிங்­கப்­பூர் டிஸ்­க­வரி சென்­ட­ருக்கு அருகே பேருந்தை நிறுத்­தும்­படி ஓட்­டு­ந­ரி­டம் அவர் கூறி­னார் என்று நீதி­மன்ற விசா­ர­ணை­யின்போது தெரி­விக்­கப்­பட்டது.