கஞ்சா கலக்கப்பட்ட ரொட்டி, கேக் போன்ற வாட்டப்பட்ட பொருட்களும் 3 கிலோவுக்கும் அதிக எடையுள்ள கஞ்சாவும் பிடிபட்டுள்ளன.
மூன்று ஆடவர்களும் ஒரு மாதும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வயது 25 முதல் 38 வரை என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
சிக்லாப் வாக் அருகே ஒரு வீட்டில் அவர்கள் சிக்கினர். 3,159 கிராம் கஞ்சா, 14 கிராம் ஐஸ், 9 கிராம் கொக்கேன், 79 எக்ஸ்டசி மாத்திரைகள், எரிமின்-5 மாத்திரை, 108 எல்எஸ்டி முத்திரைகள், கஞ்சா கலக்கப்பட்டதாக நம்பப்படும் ரொட்டி போன்ற 51 பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். $4,100 பணமும் சிக்கியது. பிடிபட்ட போதைப்பொருளின் மதிப்பு $57,000க்கும் அதிகம்.
கைதான அனைவரும் விசாரிக்கப்பட்டு வருவதாக அந்தப் பிரிவு தெரிவித்தது.

