கடன் கொடுத்து வாங்க சட்டவிரோதமான முறையில் கும்பல் ஒன்றை நடத்தியதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் போலிசார் 35 ஆடவர்களையும் ஒரு மாதையும் கைது செய்துள்ளனர்.
பல்வேறு சட்டவிரோத சூதாட்டக் குற்றங்களிலும் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று போலிஸ் சந்தேகப்படுகிறது.
புலன்விசாரணைத் துறை அதிகாரிகளும் வேவுத் துறை அதிகாரிகளும் சிறப்பு நடவடிக்கை தளபத்தியத்தைச் சேர்ந்தவர்களும் தீவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர்.
தெம்பனிஸ், பீஷான், புக்கிட் பாத்தோக் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அவர்கள் சோதனை யிட்டனர்.
கைதானவர்களுக்கு வயது 26 முதல் 63 வரை என்று போலிஸ் அறிக்கை தெரிவித்தது.
சோதனைகளில் $770,000க்கும் அதிகமான பணம், கணினி, கை பேசிகள் போன்ற சாதனங்கள் பிடிபட்டன. கைதாகி இருக்கும் 36 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
பிடிபட்டவர்களில் பத்து பேர், தொலை தூர சூதாட்டச் சட்டம், சட்டவிரோத கடன்தொழில் சட்டம் ஆகியவற்றின்கீழ் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

