காதலி மீது தாக்குதல்: ஆடவருக்குச் சிறை

காதலி மீது தாக்குதல்: ஆடவருக்குச் சிறை

1 mins read
4dece7af-22fe-42b8-aa97-5f66f9b854a3
-

காத­லர்­க­ளுக்­குள் ஏற்­பட்ட ஊடல் வன்­செலயலாக மாறி­யது. ஆட­வர் தன் காத­லி­யின் முடி­யைப் பிடித்து இழுத்து தலை­யில் உதைத்­தார்.

இந்­தச் சம்­ப­வம் சென்ற ஆண்டு ஜூலை 29ஆம் தேதி செந்­தோ­சா­வில் உள்ள 'ரூமர்ஸ் பீச் கிளப்' என்ற நிலை­யத்­திற்கு வெளியே நிகழ்ந்­தது.

தனது காத­லி­யான 31 வயது பெண்ணை நான்கு நிமி­டங்­கள் தாக்­கி­ய­தற்­காக ரஹிமான் ரஹிம், 31, என்ற அந்த ஆட­வ­ருக்கு நேற்று இரண்டு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போ­து­ ரஹி மான் முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. இது தண்­ட­னை விதிக்­கப்­பட்­ட­போது கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டது. இரு­வ­ரும் அந்­தச் சம்­ப­வத்­திற்­குப் பிறகு பிரிந்துவிட்­ட­னர்.

2020 நவம்­ப­ரில் சைனா­ட­வுன் பாயிண்­டில் டாக்சி ஓட்­டு­நர் ஒரு­வரைப் பிடித்து கீழே தள்­ளி­ய­தற்­காக நேற்று ரஹி­மா­னுக்கு $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.