கொவிட்-19 கிருமித்தொற்றுடன் இயல்பாக வாழ்தல்

கொவிட்-19 கிருமித்தொற்றுடன் இயல்பாக வாழ்தல்

8 mins read
c17c6643-fb40-416c-a424-2ab06cbd6abb
-
multi-img1 of 3

மிகுந்த கவ­லை­ய­ளிக்­கும் உரு­மாறிய 'டெல்டா' கொவிட்-19 கிருமி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­களை நாங்­கள் தொடர்­கி­றோம். அது வேக­மா­கப் பர­வு­வ­தால், கொரோனா பர­வலை முற்­றி­லும் தடுப்­பது கடி­னம். மாறாக, நாங்­கள் தீவி­ர­மா­ன­தோர் உத்­தி­யைக் கடைப்­பி­டித்து வரு­கி­றோம் - கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை முன்­கூட்­டியே தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்கு, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் காண பல முயற்­சி­களை எடுக்­கிறோம்; ஒவ்­வொரு நாளும் பத்­து ஆ­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோ­ரைப் பரி­சோ­திக்­கி­றோம். பெரிய அள­வில் கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வா­கும் அபா­யத்­தைக் குறைப்­பதே எங்­கள் நோக்­கம்.

கொரோனா ப­ர­வல் தொடங்கி 18 மாதங்­கள் கடந்­து­விட்­டதால் மக்­கள் சோர்­வ­டைந்­துள்­ள­னர். அனை­வ­ரும் கேட்­பது இது­தான்: கிரு­மிப் ­ப­ர­வல் எப்­போது, எப்­படி ஒரு முடி­வுக்கு வரும்?

நிரந்­தர நோயாகலாம்

கொவிட்-19 ஒரு­போ­தும் மறைந்­து­வி­டாது தொடர்ந்து இருக்கலாம் என்­ப­தே கவலைதரும் செய்தி. ஆனால், அச்சூழ­லி­லும் கூட, நம்­மால் இயல்­பாக வாழ­ மு­டி­யும் என்­பதே இதில் உள்ள நற்­செய்தி. கொவிட்-19 ஒரு நிரந்­தர நோயாக மாறும் சாத்­தி­யம் அதி­க­மாக இருப்­ப­தையே இது குறிக்­கின்­றது. ஆனால், இதன் பொருள் என்ன?

கிருமி தொடர்ந்து உரு­மா­றிக்­கொண்டே இருக்­கும்; அத­னால், அது நம் சமூ­கத்­தில் தொடர்ந்து உலவி வரும். இது­போன்ற நிரந்­தர நோய்க்கு, இன்­ஃபு­ளு­வன்சா எனப்­படும் சளிக்­காய்ச்­சல் ஓர் எடுத்­துக்­காட்டு.

ஆண்­டு­தோ­றும், பல­ருக்­கும் சளிக்­காய்ச்­சல் ஏற்­ப­டு­வ­துண்டு. பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பெரும்­பாலா­னோர், மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டா­மல் சிறி­த­ளவு மருந்­து­க­ளு­டன் அல்­லது மருந்­து­கள் அறவே இன்றி குண­ம­டைந்­து­வி­டு­கின்­ற­னர். ஆனால், ஒரு சிறு­பான்­மை­யி­னர், குறிப்­பாக முதி­ய­வர்­களும் மற்ற நோய்­க­ளைக் கொண்­ட­வர்­களும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­ட­லாம்; அவர்­களில் சிலர் இறக்கவும் நேரி­ட­லாம்.

ஒரு பெரிய நாட்­டில், சளிக்­காய்ச்­ச­லுக்­காக மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை மிக அதி­க­மாக இருக்­கக்­கூ­டும். எடுத்­துக்­காட்­டாக, அமெ­ரிக்­கா­வில் சளிக்­காய்ச்­ச­லுக்­காக ஆண்டுதோறும் நூறா­யி­ரக்­கணக்­கா­னோர் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்; அவர்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் மர­ண­ம­டை­கின்­ற­னர்.

ஆனால், சளிக்­காய்ச்­ச­லால் கடு­மை­யாக நோய்­வாய்ப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் மிக­வும் குறை­வாக இருப்­ப­தால், மக்­கள் அத­னு­டன் வாழப் பழ­கிக்­கொண்­டுள்­ள­னர். சளிக்­காய்ச்­சல் காலத்­தி­லும்­கூட, எளிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்­துக்­கொண்டோ, ஆண்­டுக்­கொ­ரு­முறை சளிக்­காய்ச்­சல் தடுப்­பூ­சி போட்­டுக்­கொண்டோ, அவர்­கள் அன்­றாட நட­வ­டிக்­கை­களைத் தொடர்­கின்­ற­னர்.

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்­கும், அதே போன்ற அணு­கு­மு­றையை நாம் பின்­பற்­ற­லாம். நம்­மால் அதனை முற்­றி­லும் ஒழிக்க முடி­யாது. ஆனால், சளிக்­காய்ச்­சல், கை, கால், வாய்ப்­புண் நோய், அம்மை நோய் ஆகி­ய­வற்­றைப் போல, பெரும் அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தாத ஒன்­றாய், நம்­மால் கொரோனா பர­வலை மாற்­ற­மு­டி­யும்; இயல்­பான வாழ்க்­கை­யைத் தொடர முடி­யும். இவ்­வாறு செய்­வதே, வரும் மாதங்­களில் நமது முன்­னு­ரி­மை­யாக இருக்­கும். எங்­க­ளி­டம் ஏற்­கெ­னவே விரி­வா­ன­தொரு திட்­டம் உள்­ளது.

தடுப்­பூசி போடுவது முக்­கி­யம்

முத­லில், தடுப்­பூசி. இவ்­வாண்டு மே 31 அன்று ஒளி­ப­ரப்­பான பிர­த­ம­ரின் உரை­யில், மக்­கள்­தொ­கை­யில் மூன்­றில் இரு பங்­கி­னர், ஜூலை மாதத் தொடக்­கத்­திற்­குள், குறைந்­தது முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள தாம் எண்­ணம் கொண்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார். அந்த இலக்கை நோக்கி நாம் சீரா­கச் சென்­று­கொண்­டி­ருக்­கி­றோம். விநி­யோ­கத்­தில் எந்­த­வொரு தடை­யும் இல்­லை­யெ­னில், தேசிய நாளுக்குள் மக்­கள்­தொ­கை­யில் குறைந்­தது மூன்­றில் இரு பங்­கி­னர் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் முழு­மை­யா­கப் போட்­டுக்­கொள்­ளச் செய்வதே நமது அடுத்த இலக்கு.

விநி­யோ­கத்தைத் துரிதப்படுத்தி, தடுப்­பூசி போடும் பணி­களை விரை­வாக மேற்­கொள்­ள நாங்­கள் பணி­ ஆற்றி வரு­கி­றோம்.

சான்­று­கள் தெளி­வாக உள்­ளன: கிரு­மித்­தொற்று அபா­யத்­தைக் குறைப்­ப­தி­லும் கிரு­மிப் பர­வ­லைத் தடுப்­ப­தி­லும் தடுப்­பூ­சி­கள் செயல்­தி­றன்­மிக்­க­தாக விளங்கு­கின்­றன. ஒருவர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டா­லும், அதனால் ஏற்­ப­டக்­கூ­டிய கடு­மை­யான அறி­கு­றி­க­ளைத் தடுக்க தடுப்­பூ­சி­கள் உத­வும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரி­டையே பதி­வான கிரு­மித்­தொற்று விகி­தம், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளை­விட 30 மடங்கு குறைவு என்­பதை இஸ்­ரே­லின் அனு­ப­வம் புலப்­ப­டுத்­து­கிறது. அது­போல, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ரி­டையே, மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யும் பத்து மடங்கு குறைவு.

சிங்­கப்­பூ­ரில் இரண்டு தடுப்­பூசி­களை­யும் முழு­மை­யா­கப் போட்­டுக்­கொண்­ட­போ­தி­லும், ஏறக்குறைய 120 பேர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் அனை­வ­ரிடமும் மித­மான அறி­குறி­கள் தென்­பட்­டன அல்­லது எந்­த­வோர் அறி­கு­றி­யும் தென்­ப­டவில்லை. அவர்­களில் சிலர் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள். அவர்­கள் மருத்­து­வ­ம­னை­க­ளிலோ தாதிமை இல்­லங்­க­ளிலோ வசிக்­க­வில்லை. மாறாக, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­களில், சுமார் 8 விழுக்­காட்­டி­ன­ருக்­குக் கடு­மை­யான அறி­குறி­கள் தோன்­றின.

அதிகள­வி­லான பாது­காப்­பைத் தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும், தற்­போ­தைய தடுப்­பூ­சி­க­ளுக்­குக் கட்­டுப்­படாத வகை­யில் உரு­மா­றும் புதிய கிருமி வகை­களை எதிர்த்­துத் தற்­காக்­க­வும், நோய் எதிர்ப்பாற்றலை மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான தடுப்­பூ­சி­கள் வருங்­கா­லத்­தில் தேவைப்­ப­ட­லாம். விரி­வான, பல்­லாண்­டு­கால தடுப்­பூ­சித் திட்­டத்தை நாம் தக்­க­வைத்­துக்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும்.

தடுப்­பூ­சி­ போட்­டுக்­கொள்­வதன் மூலம், நம்­மால் கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­த­மு­டி­யும் என்­பதை முதற்கட்டச் சான்று­கள் புலப்­படுத்­து­கின்­றன. இஸ்­ரே­லின் அனு­பவம் இதனை மெய்ப்­பிக்­கின்­றது. அந்நாட்டு மக்­களில் 60 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். உல­கில் அங்கு­தான் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் ஆக அதி­க­மா­கப் பதி­வா­கி­யுள்­ளது.

இஸ்­ரே­லில் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட அனைத்து வய­துப் பிரி­வி­ன­ரி­டத்­தி­லும், கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்டு, மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­டோ­ர் விகி­தம் தின­மும் 100,000 பேருக்கு 0.3 பேர்; மர­ணம் ­அடைந்­தோ­ர் விகி­தம் 100,000 பேருக்கு 0.1 பேர்.

ஒப்­பு­நோக்க, அமெ­ரிக்­கா­வில் 2018/19 ஆண்­டு­களில் சளிக்­காய்ச்­சலுக்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­டோர் விகி­தம் தின­மும் 100,000 பேருக்கு 0.4; மாண்­டோர் விகி­தம் 100,000 பேருக்கு 0.03. 2017/18 ஆண்­டு­களில் ஏற்­பட்ட கடு­மை­யான சளிக்­காய்ச்­ச­லின் போது அவ்­வி­கி­தங்­கள் முறையே 0.67, 0.05 என்று பதி­வா­யின.

இஸ்­ரே­லில் தடுப்­பூ­சி­ போட்­டுக்­கொள்­வோர் விகி­தம் அதி­க­மாக இருப்­ப­தால் அந்­த நாட்­டின் கொவிட்-19 சூழல், அமெ­ரிக்­கா­வில் பதி­வான சளிக்­காய்ச்­சல் விகி­தத்தை நெருங்­கி­யுள்­ளது. இவை மிகுந்த நம்­பிக்கை அளிக்­கின்­றன.

பரி­சோ­தனை எளி­தா­கும்

இரண்­டா­வ­தாக, பரி­சோ­த­னை­யும் கண்­கா­ணிப்­பும் தொடர்ந்து தேவைப்­படும். ஆனால், அவற்­றின் நோக்­கம் மாறு­பட்­டி­ருக்­கும். கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோரை, குறிப்­பாக, கவலை அளிக்­கக்­கூ­டிய உரு­மா­றிய கிரு­மி­க­ளால் பாதிக்­கப்­பட்­டோரை அடை­யா­ளம் காண, நம் எல்­லை­களில் தீவி­ர­மான பரி­சோ­த­னை­கள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டும்.

உள்­ளூ­ரைப் பொறுத்­த­வரை, பரி­சோ­த­னை­கள், கிருமி தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­களை அடை­யா­ளம் கண்டு, அவர்­களைத் தனி­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு கரு­வி­யாக மட்­டு­மல்­லா­மல், நிகழ்ச்­சி­கள், சமூக நட­வ­டிக்­கை­கள், வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் ஆகி­யவை பாது­காப்­பாக இடம்­பெறு­வதை உறு­தி­செய்­யத் துணை­பு­ரி­யும்; குறிப்­பாக, கிரு­மித்­தொற்­றால் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளிடம் கிரு­மி பரவுவதையும் குறைக்கும்.

பல்­ப­டி­யத் தொடர்­வி­னைப் (PCR) பரி­சோ­த­னை­களை மட்­டும் நாம் சார்ந்­தி­ருக்க முடி­யாது. அவை அசெ­ள­க­ரி­ய­மாக இருப்­ப­து­டன், பரி­சோ­தனை முடி­வு­கள் வெளி­வர பல மணி­ நே­ரம் பிடிக்­க­லாம். கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் விரை­வா­ன­தா­க­வும் எளி­மை­யா­ன­தா­க­வும் இருக்­க­வேண்­டும். சுயபரி­சோ­த­னை­கள் உட்பட ஆன்டி­ஜன் விரை­வுப் பரி­சோ­த­னை­களை நாம் பல­துறை மருந்­த­கங்­கள், தனி­யார் மருந்­த­கங்­கள், மருந்­துக் கடை­கள் ஆகி­ய­வற்­றுக்கு மட்­டு­மல்­லா­மல் முத­லாளி­க­ளுக்­கும் வளாக உரி­மை­யா­ளர்­க­ளுக்­கும் அறி­மு­கப்­ப­டுத்­தி­ இருக்கிறம்.

சுவா­சப் பரி­சோ­த­னை­கள் போன்ற ஓரிரு நிமி­டங்­களில் முடிவு­களை அளிக்­கக்­கூ­டிய, மேலும் விரை­வான பரி­சோ­த­னைக் கருவி­களும் அறி­மு­கம் காண­வி­ருக்­கின்­றன. அவை எச்­சில், சளி மாதிரி­களைப் பயன்­ப­டுத்­து­வது இல்லை. கூடிய விரை­வில் விமான நிலை­யம், கடல் துறை­மு­கம், அலு­வ­ல­கக் கட்­ட­டங்­கள், கடைத்­தொகு­தி­கள், மருத்­து­வ­ம­னை­கள், கல்வி நிலை­யங்­கள் ஆகி­யவை இந்­தப் பரி­சோ­த­னை­க­ளைப் பயன்­ப­டுத்தி ஊழி­யர்­க­ளை­யும் வரு­கை­யா­ளர்­களை­யும் பரி­சோ­திக்­க­லாம்.

கழி­வு­நீர்ப் பரி­சோ­த­னை­யும் உண்டு. வெளிநாட்டு ஊழி­யர் விடு­தி­கள், மாண­வர் விடு­தி­கள் அல்­லது குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் மறைந்­தி­ருக்­கும் கிரு­மித்­தொற்­றைக் கண்­டு­பி­டிப்­ப­தில் இது பல­ன­ளிக்­கிறது.

சிகிச்சை முறை­கள் மேம்­படும்

மூன்­றா­வ­தாக, உல­கம் முழு­வ­தும் உள்ள அறிவியல் வல்லுநர்கள், கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்­கான சிகிச்சை முறை­க­ளைக் கண்­டு­பிடிக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இன்று, செயல்­தி­றன்­மிக்க சிகிச்சை முறை­கள் பல நம்மி­டம் உள்­ளன. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்­றால் ஏற்­பட்ட இறப்பு விகி­தம் உல­க­ள­வில் மிகக் குறை­வா­ன­தாய் இருப்­ப­தற்கு இது­வும் ஒரு கார­ணம்.

கொரோனா பரவத் தொடங்கி 18 மாதங்­க­ளான பிறகு, கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்­ட­வர்­க­ளுக்­குத் தர­மான சிகிச்­சை­ய­ளிக்­க­வும், அவர்­களை விரை­வா­கக் குணப்­ப­டுத்­த­வும், நோய்ப் பர­வ­லைக் குறைக்­க­வும், நோய் கடு­மை­யா­வ­தை­யும் உயிரிழப்பையும் தடுக்­க­வும் நம்­மிடம் பல்வேறு சிகிச்சை முறை­கள் இருக்கின்றன.

சுகா­தார அமைச்சு, இந்த மேம்­பா­டு­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­து­டன், நம்­மி­டையே போது­மான அள­வில் இவற்­றுக்­கான மருந்­து­கள் இருப்­ப­தை­யும் உறு­தி­செய்­கிறது. நம் மருத்­துவ ஆய்­வா­ளர்­கள், புதிய சிகிச்சை முறை­களை உரு­வாக்­கும் முயற்­சி­களில் துடிப்­பாக ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

சமூ­கப் பொறுப்­பு­ணர்­வு­டன் நடந்­துகொள்­வது அவசியம்

இறு­தி­யாக, நாம் கொவிட்-19 ­தொற்­று­டன் வாழ முடி­யுமா என்­பது, சிங்­கப்­பூ­ரர்­கள் எந்த அள­வுக்­கு அதனை நிரந்­தர நோயாக ஏற்­றுக்­கொள்­கி­றார்­கள் என்­ப­தை­யும், நம் அனை­வ­ரின் ஒரு­மித்த வாழ்­வி­யல் முறை­க­ளை­யும் பொறுத்­தி­ருக்­கிறது.

நாம் அனை­வ­ரும் நல்ல தனி­மனி­தச் சுகா­தா­ரப் பழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டித்­தால், கிருமி தொற்­றும் சாத்­தி­யம் நம்­மி­டையே குறை­வாக இருக்­கக்­கூ­டும்.

ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பரி­வு­டன் நடந்­து­கொண்டு, உடல்நல­மில்­லா­த­போது கூட்­டங்­களைத் தவிர்த்­தால், நம்­மால் கிரு­மிப் ­ப­ர­வ­லைக் குறைக்­க­மு­டி­யும். நாம் அனை­வ­ரும் இந்­தச் சுமையை ஒற்­று­மை­யாகத் தாங்­கி­னால் - ஊழி­யர்­கள் உடல்நல­மில்­லா­த­போது வீட்­டில் இருந்து தங்­கள் சக ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­து இ­ருத்­தல்; வீட்­டில் இருக்­கும் ஊழி­யர்­களை முத­லா­ளி­கள் தவ­றா­கப் பார்க்­கா­மல் இருத்­தல் - நம் சமூகம் மேலும் பாது­காப்­பாக இருக்­கும்.

புதிய இயல்­பு­நி­லையை நோக்கி...

தடுப்­பூசி போடு­தல், பரி­சோ­தித்­தல், சிகிச்­சை­ய­ளித்­தல், சமூ­கப் பொறுப்­பு­ணர்வு ஆகி­யவை, வருங்­கா­லத்­தில் ஒரு­வரை கொரோனா தொற்­றும்­போது, நமது அணு­கு­முறை பேர­ளவு மாறு­பட்­டி­ருக்­க­லாம் என்­பதையே புலப்­ப­டுத்­து­கின்­றன.

புதிய இயல்­பு­நிலை, ஒரு­வேளை இவ்­வாறு அமை­ய­லாம்:

முத­லா­வ­தாக, கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் வீட்­டில் இருந்­த­ப­டியே குண­ம­டை­ய­லாம். ஏனெ­னில், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு, பெரும்­பா­லும் மித­மான அறி­கு­றி­களே தோன்­றும். கிரு­மி தொற்றியவரைச் சுற்­றி­யி­ருப்­போ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­தால், கிரு­மிப்­ ப­ர­வ­ல் அபா­யம் குறை­வா­கவே இருக்­கும். சுகா­தாரப் பரா­ம­ரிப்­புத் துறை மீதான பளு அதி­க­மா­கி­வி­டும் என்று நாம் அதி­கம் கவ­லைப்­ப­ட­வேண்­டி­ய­தில்லை.

இரண்­டா­வ­தாக, கொரோனா பாதிப்பு உறு­தி­செய்­யப்­படும் ஒவ்­வொரு முறை­யும், நாம் பெரிய அள­வில் தொடர்­பு­க­ளின் தடங்­க­ளைக் கண்­ட­றி­யவோ, மக்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­தவோ தேவை இல்­லா­மல் போக­லாம். பல­த­ரப்­பட்ட விரை­வான, எளி­மை­யான கொவிட்-19 பரி­சோ­த­னை­க­ளைக் கொண்டு, மக்­கள் தங்­களை அடிக்­கடி பரி­சோ­தித்­துக்­கொள்­ள­மு­டி­யும். கிரு­மித்­தொற்று இருப்­பது தெரியவந்­தால், அவர்­கள் பல்­ப­டி­யத் தொடர்வினைப் பரி­சோ­தனை மூலம் அதனை உறு­திப்­படுத்­திக்­கொண்டு, தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

மூன்­றா­வ­தாக, ஒவ்­வொரு நாளும், கொவிட்-19 பாதிப்பு எண்­ணிக்­கை­யைக் கண்­கா­ணிப்­பதை விட, அவற்­றால் ஏற்­படும் விளைவு­களில் கவ­னம் செலுத்­து­வோம்: எத்­தனை பேர் கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்­டுள்­ள­னர்; எத்­தனை பேர் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­மதிக்­கப்­பட்­டுள்­ள­னர்; எத்­தனை பேருக்­கு உயிர்வாயு சிகிச்சை தேவைப்­ப­டு­கிறது, முத­லா­னவை. இது, நாம் இப்­போது சளிக்­காய்ச்­சலைக் கையாள்­வது போன்­றது.

நான்­கா­வ­தாக, பாது­காப்­பு நிர்­வாக விதி­மு­றை­க­ளைப் படிப்­ப­டி­யா­கத் தளர்த்தி, பெரிய அள­விலான ஒன்­று­கூ­டல்­க­ளை­யும், தேசிய தின அணி­வ­குப்பு, புத்­தாண்டு வர­வேற்­புக் கொண்­டாட்­டம் போன்ற முக்­கிய நிகழ்­வு­க­ளை­யும் மீண்­டும் தொடங்­க­லாம். தொழில்­கள், தங்­கள் செயல்­பா­டு­கள் தடை­யின்றி தொட­ரும் என்ற நம்­பிக்­கை­யைக் கொண்­டி­ருக்­கும்.

ஐந்­தா­வ­தாக, நோய்ப்­ப­ர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்­டு­வந்து, அதை நிரந்­த­ர­ இயல்­பு­நி­லை­யாக மாற்­றி­ இருக்­கும் நாடு­க­ளுக்கேனும் நாம் மீண்­டும் பய­ணம் மேற்­கொள்­ள­லாம். நாடு­கள், ஒன்று மற்­றொன்­றின் தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­களை அங்­கீ­க­ரிக்­கும். பய­ணி­கள், குறிப்­பா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள், பய­ணத்­திற்குமுன் பரி­சோ­தனை மேற்­கொண்டு, 'கிரு­மித்­தொற்று இல்லை' என்று உறு­தி­செய்­யப்­பட்­டால், அவர்­கள் செல்­லும் நாட்­டில் தடைக்­காப்­பி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­ப­ட­லாம்.

தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தில் நாம் எட்­டிய மைல்­கல்­லு­டன், இப்­பு­திய இயல்­பு­நி­லைக்கு மாறு­வ­தற்­கான திட்­டம் ஒன்­றை­யும் உரு­வாக்கி வரு­கி­றோம். ஆனாலும், கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டம் தொடர்ந்து நிச்­ச­ய­மற்­ற­தாக அமை­யும் என்­பதை நாங்­கள் நன்கு அறிந்­துள்­ளோம்.

இவ்­வே­ளை­யில், கொரோனா ப­ர­வலை­யும் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யை­யும் கட்­டுக்­குள் கொண்­டு­வர, முன்­னெச்­ச­ரிக்­கை­களை­யும் பாது­காப்பு நட­வடிக்­கை­களை­யும் நாம் தொடர்ந்து கடைப்­பி­டிக்­க­வேண்­டும்.

ஒவ்­வொரு கிரு­மிப் ­ப­ர­வ­லும் கடந்­து­போ­கும் என்­பதை வர­லாறு நமக்கு உணர்த்­தி­யுள்­ளது. நாம் எட்ட விரும்­பும் இறு­திக்­கட்ட நிலையை விரை­வில் அடை­வ­தற்கு, நமது ஆற்­றல், வளங்­கள், கற்­பனைத்­தி­றன் ஆகிய அனைத்­தை­யும் பயன்­ப­டுத்­த­வேண்­டும்.

இறுதி­யில், அறி­வி­ய­லும் மனித நுண்­ண­றி­வும் கொவிட்-19 கிரு­மியை நிச்­ச­யம் வீழ்த்­தி­வி­டும். ஒற்­று­மை­யும் சமூ­கப் புரிந்­து­ணர்­வும் நம்மை அந்த நிலைக்கு விரை­வில் இட்­டுச் செல்­லும். இதற்கு, நாம் அனை­வ­ருமே நம் பங்­கை­ ஆற்ற­வேண்­டும்.