தொடர்பின்றி இருவர் உட்பட சமூகத்தில் 14 பேர் பாதிப்பு

தொடர்பின்றி இருவர் உட்பட சமூகத்தில் 14 பேர் பாதிப்பு

1 mins read
68c526b8-4f7f-4f5f-8a3c-568c479cb57e
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 23 பேருக்கு கொவிட்-19 உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து, மொத்த பாதிப்பு 62,493 ஆனது.

அவர்­களில் 14 பேர் சமூ­கத்­தில் இருப்­ப­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அந்த 14 பேரில் இரு­வர் ஏற்­கெ­னவே கிருமி தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பில்­லா­த­வர்­கள் என்று இப்­போது வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

தொடர்­பி­ருந்த வகை­யில் கொரோனா தொற்­றிய 12 பேரில் 11 பேர் ஏற்­கெ­னவே தனி­மைப்­படுத்­தப்­பட்­ட­வர்­கள்.

நேற்று தொற்று உறு­தி­யா­னோ­ரில் எஞ்­சிய ஒன்­பது பேரும் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­த­வர்­கள். அவர்­களில் நால்­வர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களில் புதி­தாக எவ­ரை­யும் கொரோனா தொற்­ற­வில்லை.

முன்­ன­தாக, தொடர்­பின்றி கிருமி தொற்­றி­ய­தாக நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்ட மூவ­ரில் தேசிய தொற்­று­நோய்த் தடுப்பு நிலை­யத்­ தாதி­யும் ஒரு­வர்.

சளி, தொண்டை எரிச்­சல் ஆகிய அறி­கு­றி­க­ளைத் தொடர்ந்து தனியார் மருத்­து­வ­ரி­டம் சிகிச்சை பெற்ற அவர், ஆன்டிஜன் விரை­வுப் பரி­சோ­த­னை­யும் 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யும் செய்­து­கொண்­டார். அவ்­விரு பரி­சோ­தனை முடிவு­களும் அவர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­ததை உறு­திப்­படுத்­தின. அவர் கடந்த பிப்­ர­வரி 20ஆம் தேதியே இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார்.

முன்­னர் கொரோனா தொற்­றி­யோ­ரு­டன் தொடர்­பி­ருந்த வகை­யில் பத்­துப் பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தாக நேற்று முன்­தினம் அமைச்சு தெரி­வித்­தது. சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் இது­வரை 35 பேரும் கிருமி தொற்­றி­ய­போது வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­க­ளால் 15 பேரும் மாண்­டு­விட்­ட­னர்.