சிங்கப்பூர் புத்தாக்க இந்திய கலையகம் 'மெய்நிகர் வழி கலை பேச்சு' என்ற இணைய பகிர்வு நிகழ்ச்சியை இம்மாதம் 12ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு நடத்தியது.
இந்த மாறுபட்ட வாழ்க்கைச் சூழலில், சிங்கப்பூரையும் தாண்டி உலகளாவிய முறையில் நமது அண்டை நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகளோடு இணைந்து அனைவரும் பயன்பெறும் நிகழ்ச்சி களை நடத்தும் நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப்பட்டது.
மலேசிய இந்தியக் கலைஞர் இயக்கத்தின் (PAAIM) தலைவரும் ஜோகூர் பாரு பிரிவின் இயக்குநருமான திரு சிவகுமாரும் சிங்கப்பூர் புத்தாக்க இந்திய கலையகத்தின் தலைவர் திரு குணசேகரனும் மெய்நிகர் வழி நேரடியாக உரையாடி பல சுவைத் தகவல்
களைப் பகிர்ந்துகொண்டனர்.
மலேசிய நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அங்கு கலைத்துறை நோக்கிச் செல்லும் பாதை, எதிர்கொள்ளும் சவால்களை விளக்கியதுடன் சமூக ஊடகங்கள், இணைய பயன்பாடுகள் மூலம் எத்தகைய புத்தாக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பது பற்றி இருவரும் கலந்துரையாடினர்.
இந்த ஒரு மணி நேர நிகழ்ச்சி யில் திரு குணசேகரன், கைபேசி வழி எத்தகைய செயல்பாடுகளையும் படைப்புகளையும் செயலிகள் மூலம் உருவாக்க முடியும் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கினார்.
பெரும்பாலான நேரங்களில் நம் முன் இருக்கும் கருவிகள் மூலம் உயர்தரமான ஒலி, ஒளி மற்றும் முப்பரிமாண தயாரிப்புகளுடன் பொருள் ஈட்டக்கூடிய உயர்தரமான கலைப் படைப்புகளைத் தயாரிக்கும் உத்திகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
இதன் மூலம், சிங்கப்பூர், மலேசிய கலைஞர்களுக்கு இடையே இருக்கும் கலைத் தாகம் தீர்வ
தற்கு வீட்டில் இருந்தாலும் வெளியுலகைச் சென்றடைவதற்கான வழிமுறைகளையும் இங்கு விளக்கமாகப் பதிவு செய்தார்கள்.
மேலும் அனைவரும் பயன்
பெறும் வகையில், தொடர்ந்து இணைய பகிர்வுகள், பேட்டிகள், பயிலரங்குகள் மூலம் இன்னும் அதிகமான புரிந்துணர்வை ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஆகியவை பற்றி இரு அமைப்புகளின் தலைவர்களும் வெளிப்படுத்தினர்.
இந்த காலம், வழங்கியிருக்கும் புதிய வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்தி, புத்தாக்க சிந்தனை
களோடு தரமான கலைஞர்களாக வளர்வதற்கு உரிய தேடல்களின் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதனை தொடர்ந்து, மொரி ஷியஸ், கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும்
தமிழர்கள் வாழும் அனைத்து
பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் இணையம் வழி கலை வளர்ப்பு முயற்சி தொடர இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் இணைய பதிவை https://youtu.be/q3XEUp-L_yI எனும் முகவரியில் கண்டு மகிழலாம்.

