இல்­லத் தனிமை உத்­த­ரவை மீறி­ய­வ­ருக்­குச் சிறை

இல்­லத் தனிமை உத்­த­ரவை மீறி­ய­வ­ருக்­குச் சிறை

1 mins read
2a3bf3c6-c84f-4439-a47d-db74b2f0143f
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க முன்­னெச்­ச­ரிக்­கை­யாக விதிக்­கப்­பட்ட இல்­லத் தனிமை உத்­த­ரவை மீறிய அமெ­ரிக்க நாட்­ட­வ­ருக்கு ஒரு வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 19ஆம் தேதி­யன்று 38 வயது பாய் ஃபான் சீனா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யு­மான பாய் சிங்­கப்­பூர் வந்­த­தும் ஃபேர்மோண்ட் ஹோட்­டல் சிங்­கப்­பூ­ரில் கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 3ஆம் தேதி வரை அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

இந்­நி­லை­யில் தமது 38வது பிறந்­த­நாளை முன்­னிட்டு ஹோட்­ட­லி­லி­ருந்து வெளி­யேறி தமது மனை­வியை அவர் சந்­தித்­தார். கிட்­டத்­தட்ட ஐந்து மணி நேரத்­துக்கு தமது மனை­வி­யு­டன் அவர் காரில் இருந்­தார். அவ­ரது 41 வயது மனை­விக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா என்­பது குறித்து தக­வல் ஏது­மில்லை .