தீவி­ர­வா­தப் போக்கை ஆத­ரித்த நூலுக்­குத் தடை

2 mins read
6131b55f-a2a8-4ac6-881b-8272f38c5b35
-

சுய தீவி­ர­வா­தப் போக்­கிற்கு மாறிய முன்­னாள் முழு­நேர தேசிய சேவை­யா­ளர் படித்த நூலை தொடர்பு, தக­வல் அமைச்சு தடை செய்­துள்­ளது. ஆயு­தம் ஏந்தி புனி­தப் போரில் ஈடு­ப­வதை அந்­தப் புத்­த­கம் ஊக்­கு­வித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அது­மட்­டு­மல்­லாது, மற்ற சம­யத்­தி­ன­ருக்கு எதி­ரான பகைமை உணர்வை அது தூண்­டி­ய­தாக அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கடந்த பிப்­ர­வரி மாதத்­தில் 20 வயது அமி­ருல் அலி கைது செய்­யப்­பட்டு உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டார்.

வாட்­டர்லூ ஸ்தி­ரீட்­டில் உள்ள யூதர் வழி­பாட்­டுத் தலத்­தில் தாக்­கு­தல் நடத்த அவர் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அமி­ருல் சுய தீவி­ர­வா­தப் போக்­கிற்கு மாற 'இஸ் அட்­தீன் அல் கஸாம் அதி­ர­டிப் படை­கள்: உயிர்த் தியா­கம் செய்ய விரும்­பும் இளம் தலை­மு­றை­யி­னர்' என்ற தலைப்பு கொண்ட அந்த நூலும் ஒரு கார­ண­மாக இருந்­த­தாக அமைச்சு கூறி­யது.

அந்த நூலை அவர் 2015ஆம் ஆண்­டில் வெளி­நாட்­டில் வாங்­கி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது.

அந்த நூலுக்­கான தடையை சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் (மூயில்) வர­வேற்­றுள்­ளது. வன்­மு­றை­யைத் தூண்­டு­வது, மற்ற சம­யத்­தி­ன­ருக்கு எதி­ரா­கப் பகை­மை­யைத் தூண்­டு­வது ஆகி­யவை இஸ்­லா­மிய கோட்­பாடு அல்ல என்று மூயிஸ் தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூர் இளை­யர்­கள் தீவி­ர­வா­தப் போக்­கிற்கு மாறி­வி­டா­த­படி அவர்

களைக் கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும் என்று உள்­துறை இரண்­டாம் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

"தொடர்ந்து விழிப்­பு­டன் இருப்­பது மிக­வும் முக்­கி­யம். பல்­லின, பல சமய மக்­க­ளி­டை­யி­லான நட்­பு­றவை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­கள் தொடர வேண்­டும்," என்­றார் அமைச்­சர் டியோ.