சிங்கப்பூரில் இன்று பிற்பகல் 20 பேருக்கு கொரோனா கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரில் மொத்தம் 62, 513 பேருக்கு கொவிட்-19 தொற்றியுள்ளதாகப் பதிவாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிய சம்பவங்களில் 15, சமூக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த 15 பேர் மூவருக்கு ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லை. எஞ்சிய ஐவர் வெளிநாடுகளில் கிருமி தொற்றுடன் இங்கு வந்தவர்கள்.

