117 பேருக்கு அபராதம்; முன்பதிவை நிறுத்தி வைக்க ஆர்ச்சர்ட் ஹோட்டலுக்கு உத்தரவு

117 பேருக்கு அபராதம்; முன்பதிவை நிறுத்தி வைக்க ஆர்ச்சர்ட் ஹோட்டலுக்கு உத்தரவு

2 mins read
74a0f36f-c7b8-4d28-8b52-a03e7316aedd
-

இம்மா­தம் 14ஆம் தேதி கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தில் இருந்து, பூங்­காக்­க­ளி­லும் கடற்­கரை­க­ளி­லும் குழு வரம்பு போன்ற பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்கை விதி­களை மீறி­ய­தற்­காக 117 பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டு உள்­ளது.

கடு­மை­யான உடற்­ப­யிற்­சி­களைச் செய்­யா­த­போது முகக்­க­வ­சம் அணி­யா­த­தும் அந்த விதி­மீறல்­களில் அடங்­கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சமூ­கத்­தில் கொரோனா பாதிப்பு குறைந்­ததையடுத்து, கடந்த 14ஆம் தேதி­ முதல் சமூக ஒன்­று­கூ­டல்­களில் குழு­வாக ஐவர் வரை பங்­கேற்க அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது.

ஆனால், சாங்கி கடற்­கரை பூங்­கா­வில் 17 பேர் கொண்ட குழு­வும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்­கா­வில் 13 பேர் கொண்ட குழு­வும் பிடி­பட்­டன.

விதி­மீ­றி­ய­மைக்­காக 1,800 எச்­ச­ரிக்­கைக் கடி­தங்­கள் வழங்­கப்­பட்­டு உள்­ள­தாக அமைச்சு குறிப்­பிட்­டது.

இத­னி­டையே, இவ்­வாண்டு பிப்­ர­வரி 6ஆம் தேதி ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லின் ஒரே அறை­யில் 11 பேர் சேர்ந்து பிறந்­த­நாள் கொண்­டா­டி­யதை சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழக அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த ஹோட்­ட­லுக்கு ஆயி­ரம் வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

அத்­து­டன், அடுத்த மாதம் 24ஆம் தேதி வரை அறை­க­ளுக்கு முன்­ப­திவு செய்­ய­வும் அந்த ஹோட்­ட­லுக்­குத் தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆயி­னும், தடை­யுத்­த­ர­வுக்கு முன்­னர் மேற்­கொள்­ளப்­பட்ட முன்­பதி­வு­க­ளுக்கு சேவை வழங்க அனு­ம­தி அளிக்கப்பட்டுள்ளது.

அந்­த­வோர் அறை­யில் இருந்த 11 பேரி­டம் விசா­ரணை தொடர்­கிறது. அவர்­கள்­மீது அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­லாம் எனச் சொல்லப்ப­டு­கிறது.

நீர் விளை­யாட்­டுப் பகு­தி­கள், நீர்க் கேளிக்கை வச­தி­கள், முகா­மி­டங்­கள், தேசிய பூங்­காக் கழ­கத்­தால் நிர்­வ­கிக்­கப்­படும் பூங்­காக்­களி­லும் தோட்­டங்­க­ளி­லும் இருக்­கும் உணவு வாட்­டும் முனை­கள் ஆகி­யவை அடுத்த அறி­விப்பு வெளி­யா­கும் வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என்­றும் அமைச்சு தெரி­வித்­து உள்­ளது.

மேலும், கூட்­டம் அதி­க­மாக இருந்­தா­லும் அல்­லது மக்­கள் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு இணங்­கா­வி­டி­னும் சில பூங்­காக்­கள், கடற்­க­ரைப் பகு­தி­கள், புல்­வெ­ளி­கள், பிற வச­தி­கள் மூடப்­ப­ட­லாம் என்­றும் அமைச்சு கூறி­யி­ருக்­கிறது.

வரும் வார­யி­று­தி­களில் உணவு, பான வளா­கங்­களில் அதி­கா­ரி­கள் சோத­னை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­து­வர் என்று கூறி­யுள்ள அமைச்சு, அவற்­றின் நடத்­து­நர்­கள் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வும் வலி­யு­றுத்தி­ இருக்கிறது.