பன்முகத்தன்மையோடு கூடிய இன நல்லிணக்கம்: அமைச்சர்

பன்முகத்தன்மையோடு கூடிய இன நல்லிணக்கம்: அமைச்சர்

2 mins read
d19e92e0-0d4f-4533-9762-7e0549393e93
-

சிங்­கப்­பூ­ரில் இன நல்­லி­ணக்­கத்தை எட்ட, தங்­க­ளது கலா­சா­ரத்­தின் சில பகு­தி­க­ளைக் கைவி­டு­மாறு எந்த ஒரு சமூ­க­மும் கேட்­டுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் மாறாக அவற்­றின் பன்­மு­கத்­தன்­மை­ தழு­விக்­கொள்­ளப்­பட்­டது என்­றும் நிதி­ அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்­துள்­ளார்.

கொள்கை ஆய்­வுக் கழ­க­மும் எஸ்.ராஜ­ரத்­தி­னம் அனைத்­து­லக ஆய்­வுக் கழ­க­மும் இணைந்து நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்த இனம் மற்­றும் இன­வா­தம் தொடர்­பான கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு பேசிய அமைச்­சர் வோங், மற்ற நாடு­க­ளைக் காட்­டி­லும் சிங்­கப்­பூரின் பல்­லி­னக் கலா­சா­ரம் தனித்­து­வ­மா­னது, வேறு­பட்­டது என்று குறிப்­பிட்­டார்.

பன்­மு­கத்­தன்­மையை சிங்­கப்­பூர் குறைத்து மதிப்­பி­டாது என்று உறுதி­ப­டக் கூறிய அவர், ஆனால் அதனை ஏற்­றுக்­கொண்டு, கொண்­டாடி வரு­வ­தா­க­வும் சொன்­னார்.

பல்­லி­னச் சமுதாயம் என்­பது மக்­கள் கொண்­டுள்ள தனிப்­பட்ட அடை­யா­ளங்­களை மறந்­து­வி­டு­வது எனப் பொருள்­கொள்­ளக்­கூ­டாது என்­றும் அதற்­குக் கலா­சார வேறு­பா­டு­க­ளை­யும் வர­லா­று­க­ளை­யும் அழிக்­கத் தேவை­யில்லை என்­றும் அமைச்­சர் வோங் கூறி­னார்.

"மாறாக, அது நமது மர­பு­டை­மை­க­ளைத் தழுவி, நம்மை இணைக்­க­வும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் மதிப்­பு­கொள்­ளு­மா­றும் செய்­கிறது; ஒரு தேசிய அடை­யா­ளத்­தை­யும் பகிர்ந்த நோக்­கத்­தை­யும் உள்­ள­டக்­கு­மாறு செய்­கிறது," என்­றார் அவர்.

பல்­லி­னச் சமுதாயம் குறித்த தனது அணுகு­மு­றை­யில் சிங்­கப்­பூ­ரின் இரு­மொழிக் கொள்கை முக்­கி­யப் பங்­காற்­று­கிறது என்­றும் வட்­டார மொழி­கள் கொண்­டுள்ள மரபு­களை அறிந்துகொள்ள குழந்­தை­களை அது அனு­ம­திக்­கிறது என்­றும் அவர் சொன்­னார்.

வட்­டார மொழி­க­ளைக் காக்க பெரு­மு­யற்சி எடுக்­கப்­பட்டு வரு­வதா­க­வும் அவர் கூறி­னார். பள்ளிக் குழந்­தை­கள் தங்­க­ளது தாய்­மொழி­க­ளைக் கற்க வலி­யு­றுத்­து­வது, வட்­டார மொழி­க­ளின் தரங்­களைக் கட்­டிக்­காக்க வளங்­களை ஒதுக்­கு­வது, வட்­டார மொழி ஊட­கங்­கள் நிலைத்­தி­ருக்க உத­வு­வது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.