புக்கிட் மேரா வியூ சந்தை மீண்டும் திறப்பு

சிங்கப்பூரில் தற்போது ஆகப் பெரிய திறந்த கொவிட்-19 குழுமமான புக்கிட் மேரா வியூ சந்தை மற்றும் உணவுச் சந்தை, இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், அங்குள்ள 182 கடைகளில் 10க்கும் குறைவான கடைகள் மட்டுமே திறந்திருந்ததாக அங்கு காலை 8.30 மணிக்குச் சென்ற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிருபர்கள் தெரிவித்தனர்.

மக்கள் நடமாட்டமும் மிகக் குறைவாகவே உள்ளது. கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்குச் சென்று அங்குள்ள பொருட்களை எடுக்கச் சென்றிருந்தனர்.

சனிக்கிழமை நிலவரப்படி, இதுவரை அந்த குழுமத்துடன் 89 சம்பவங்கள் தொடர்புடையவை. குழுமத்தில் ஜூன் 13ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் நபருக்கு ஜூன் 9ஆம் தேதியன்று கிருமி தொற்றியது. சிங்கப்பூரரான அந்த 74 ஆடவர், சந்தையில் ஊழியராக பணியாற்றுகிறார்.

ஜூன் 13ஆம் தேதி முதல் ஜூன்26ஆம் தேதி வரை அந்தச் சந்தை மூடப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!