சிங்கப்பூரில் தங்கும் 300க்கும் அதிகமான வெளிநாட்டு ஊழியர்களின் மன நலத்தை மேம்படுத்துவதற்கான புதிய மனநல திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மனிதவள அமைச்சினாலும் 'சு சீ' மனிதாபிமான இளையர் மையமும் இன்று (ஜூன் 27ஆம் தேதி) தொடங்கப்பட்டுள்ளது.
கிருமிப்பரவலால் வெளிநாட்டு ஊழியர்கள் இன்றும் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட பல்வேறு பயிரலங்குகளில் கவிதை வாசித்தல், மனநல உரை, தியானப் பயிற்சி ஆகியவை கற்றுத்தரப்பட்டன.
தங்கும் விடுதிகளில் கொவிட்-19 பரவத் தொடங்கியதிலிருந்து இங்குள்ள 300,000 ஊழியர்களின் நடமாட்டம் இன்று வரையிலும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

