சிங்கப்பூரில் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக இருந்த புக்கிட் மேரா வியூ சந்தை இரண்டு வாரமாக மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது.
எனினும், சில கடைகளே மீண்டும் திறந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ேநற்று செய்தியாளர்கள் அங்கு சென்றபோது அங்கிருக்கும் 182 கடைகளில் 10க்கும் குறைவானவையே திறந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கிருக்கும் கடை உரிமையார்களில் சிலர் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பின் தங்கள் கடைகளை சுத்தம் செய்யவும் அங்கிருக்கும் சரக்கை எடுத்துச் செல்வதற்கும் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது.
சந்தையில் மக்கள் வருகையும் குறைந்திருந்ததாகச் சொல்லப்படும் நிலையில், அங்கு சென்ற சிலரிடம் தாங்கள் இன்னமும் பழையபடி வர்த்தகத்தை தொடங்கவில்லை என்று வந்தவர்களிடம் கடைக்காரர்கள் கூறியதாக தெரிகிறது.
புக்கிட் மேரா வியூ சந்தையில் கோழி இறைச்சி விற்பனையில் தமது கணவருடன் ஈடுபட்டு வந்துள்ள திருவாட்டி லின்டாவதி, 47, நேற்று மீண்டும் கடைக்கு வந்து தமது வர்த்தகத்தை தொடங்கியவர்களுள் ஒருவர்.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது போட்டுக் கொள்ளவிருக்கின்றனர் என்பதால் கிருமித்தொற்று குறித்து தாம் அதிகம் கவலை கொள்ளவில்லை என அவர் விளக்கினார்.
இவரது ஐந்து குடும்ப உறுப்பினர்களின் தனிமைப்படுத்திக் ெகாள்ளும் காலம் சனிக்கிழமையுடன் முடிந்து விட்டது. கடையை ஏன் சீக்கிரமாக திறந்துவிட்டீர்கள் என்ற கேள்விக்கு தமக்கு வேறு வழியில்லை என்றும் இரண்டு வாரங்களாக வருமானம் ஏதுமின்றி தம் குடும்பம் சிரமத்துக்கு உள்ளானது என்றும் அவர் விவரித்தார்.
எனினும், மீண்டும் வர்த்தகம் தொடங்க உள்ளதால் இவர் வருங்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இங்கு வரும் பலரின் நட வடிக்கைகள் கிருமித்ெதாற்று அபாயத்தை ஏற்படுத்தியிருப்பதாக 51 வயது வழக்கறிஞர் ஹோ வூன் சான் தெரிவித்தார்.
இங்கு பலர் பல மணி நேரம் புகைபிடித்தும் பானம் அருந்திக் கொண்டும் இருப்பதையும் பலர் முகக்கவசங்களை முறைப்படி அணியாததையும் தாம் பார்த்ததாகக் கூறினார்.
புக்கிட் மேரா வியூ சந்தையில் சனிக்கிழமை நிலவரப்படி கிருமித்தொற்றுக்கு உட்பட்ட கடைகளின் எண்ணிக்கை 89. இதில் இங்கு முதல் கிருமித்தொற்று சம்பவம் ஜூன் 9ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.
கிருமித்தொற்றுக்கு ஆளானவர் 74 வயது சிங்கப்பூர் ஆடவர். இவர் இங்கிருக்கும் பல்பொருள் கடையில் வேலை பார்ப்பவர். இந்த ஈரச்சந்தை முதலில் இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிவரை சுத்தம் செய்யப்படுவதற்காக மூடப்பட்டது. பின்னர், மேலும் கிருமித்தொற்று சம்பவங்கள் ஏற்படவே ஜூன் 26ஆம் தேதிவரை சந்தை மூடப்பட்டது.

