தனது ஊழியர்கள் ஏதாவது தவறு செய்தால் அவர்களுக்கு எதிராக தைரியமாகப் புகார் செய்ய புதிய தளம் ஒன்றை அமைக்க நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி திட்டமிட்டுள்ளது. அதற்கான சேவை வழங்குநரை அது தேடி வருகிறது.
ஊழியர்களுக்கு எதிராகப் புகார் செய்தால் அதற்கான பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்ற அச்சம் ஏற்படாமல் இருக்க இந்தத் தளம் அமைக்கப்படுகிறது.
இதன்மூலம் ஊழியர்களுக்கு எதிராக சக ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி புகார் செய்யலாம்.
ஊழியர்களுக்கு எதிராகப் புகார்களைப் பெற tellnp@np.edu.sg எனும் மின்னஞ்சல் முகவரியை நீன் ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி தற்போது பயன்படுத்துகிறது.
புதிய அணுகுமுறை நடை
முறைப்படுத்தப்பட்டதும் தற்போது நடப்பில் இருக்கும் முறை கை
விடப்படுமா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
முறையற்ற நடத்தை கொண்ட ஊழியர்கள், மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் ஊழியர்கள் போன்றோருக்கு எதிராகப் புதிய திட்டம் வழி புகார் செய்யலாம்.

