சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு

சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு

2 mins read
b084ac38-af37-4cc7-9569-dff654ebf55f
-

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடர் தோல்வியை உறுதிசெய்வதற்கான உலகளாவிய முயற்சிகள்

ஐஎஸ்­ஐ­எஸ் பயங்­க­ர­வாத அமைப்­பின் தொடர் தோல்­வியை உறு­தி­செய்­யும் உல­க­ளா­விய முயற்­சி­களுக்­கான சிங்­கப்­பூ­ரின் ஆத­ரவை வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் மறு­உ­று­திப்­ப­டுத்தி­ உள்­ளார்.

அந்­தப் பயங்­க­ர­வாத இயக்­கத்­தின் பிடி­யில் இப்­போது எந்­தப் பகு­தி­யும் இல்லை என்­ற­போ­தும், அது உல­க­ள­வில் தொடர்ந்து ஒரு பர­வலான இருப்­பைத் தக்­க­வைத்­துக் கொண்­டுள்­ளது என்­றும் அச்­சு­றுத்­த­லாக நீடிக்­கிறது என்­றும் டாக்­டர் விவி­யன் குறிப்­பிட்­டார்.

இத்­தாலி தலை­ந­கர் ரோமில் நடை­பெற்ற 83 நாடு­க­ளின் 'ஐஎஸ்­ஐஎஸ் இயக்­கத்­தைத் தோற்­க­டிப்­ப­தற்­கான உல­கக் கூட்­டணி' அமைச்சர்­நி­லை கூட்­டத்­தில் கலந்து­கொண்­ட­போது டாக்­டர் விவி­யன் இவ்­வாறு பேசி­னார்.

வலு­வான பாது­காப்பு நட­வடிக்கை தேவை என்­றும் ஆனால் அது போதாது என்­றும் சொன்ன அவர், பயங்­க­ர­வாத எதிர்ப்­பில் அணுக்­க­மான சமூக ஈடு­பாட்­டின் மூல­மும் உள்­நாட்­டுப் பாது­காப்பு எதிர்­வினை ஆயத்­த­நிலை மூல­மும் சிங்­கப்­பூர் மேற்­கொண்டு வரும் முயற்­சி­க­ளை­யும் குறிப்­பிட்­டார்.

ஒத்த எண்­ணம் கொண்ட நாடு­கள் வேவுத் தக­வல்­க­ளைப் பகிர்ந்து­கொள்­ள­வும் கண்­கா­ணிப்பு, பகுப்­பாய்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் ஏது­வாக சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்டு பயங்­க­ர­வாத எதிர்ப்பு தக­வல் மையம் நிறு­வப்­பட்­டதை அவர் சுட்­டி­னார்.

"தாமா­கத் தீவி­ரப்­போக்கை நாடிய தனி­ம­னி­தர்­களை அடை­யாளம் காண சமூ­கத்­து­ட­னும் சமய அமைப்­பு­க­ளு­ட­னும் தொடர்ந்து அணுக்­க­மா­கப் பணி­யாற்­று­வோம்," என்­றார் அமைச்­சர்.

"உல­கம் முழு­வ­தும், இந்த வட்­டா­ரம் முழு­வ­தும் உள்ள மக்­க­ளின் மனங்­க­ளை­யும் இத­யங்­க­ளை­யும் நாம் ஈர்க்க வேண்­டும். பல்­வேறு குழுக்­க­ளுக்கு இடையே நம்­பிக்­கை­யை­யும் ஒற்­று­மை­யை­யும் ஏற்­படுத்தி, தவ­றான கண்­ணோட்­டங்­களும் தப்­பெண்­ணங்­களும் எங்கு தோன்­றி­னா­லும் அவற்றை வேர­றுக்க வேண்­டும்," என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

ஈராக்­கி­லும் சிரி­யா­வி­லும் ஐஎஸ் இயக்­கம் அடைந்த தோல்வி எட்டு மில்­லி­யன் மக்­களை விடு­வித்­துள்­ளது என்று கூட்­டணி ஒரு கூட்­ட­றிக்கை வழி­யா­கத் தெரி­வித்­தது.

ஆயினும், பாது­காப்பு அமைப்பு­களை­யும் பொது­மக்­க­ளை­யும் குறி­வைக்­கும் வகை­யில் அந்­தப் பயங்­க­ர­வாத இயக்­கம் மீண்­டும் தன்­னைக் கட்­டி­யெ­ழுப்பி, செய­ல் வல்லமை பெறா­த­படி தடுப்­ப­தற்­குப் போதிய வளங்­கள் தேவைப்­ப­டு­வதா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது.

கூட்­ட­ணி­யில் இடம்­பெற்­றுள்ள நாடு­க­ளு­டன் இணைந்து செய­லாற்­று­வ­தில் சிங்­கப்­பூரின் கடப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­திய அமைச்­சர் விவி­யன், "ஐஎஸ்­ஐ­எஸ் இயக்­கத்­தைத் தோற்­க­டிப்­ப­தற்­கான உல­கக் கூட்­ட­ணிக்­குப் படை­வீ­ரர்­க­ளை­யும் உடை­மை­க­ளை­யும் வழங்­கிய முதல் தென்­கி­ழக்­கா­சிய நாடாக, நமது கூட்டு­மு­யற்­சி­யின் மூலம் ஈராக்­கி­லும் சிரி­யா­வி­லும் ஐஎஸ் அமைப்பை அழித்­தொ­ழித்­த­தில் சிங்­கப்­பூர் மகிழ்ச்சி கொள்­கிறது," என்­றார்.

ஆனா­லும், ஐஎஸ் தொடர்ந்து அச்­சு­றுத்­த­லாக நீடிக்­கிறது என்­றும் மின்­னி­லக்க உல­கம் வழி­யாக தனது கட்­ட­மைப்பை விரி­வு­ப­டுத்தி, தீவி­ர­வா­தத்­தைப் பரப்பி வரு­கிறது என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

ஐஎஸ்ஸில் சேர்ந்து சண்­டை­யிட்­ட­பின் தாய்­நா­ட்டிற்குத் திரும்பு­வோர் இப்­போ­தைய அபா­யம் என்­றும் டாக்­டர் விவி­யன் குறிப்­பிட்­டார்.