தேசிய சேவையில் சேரும் முன்னர் தடுப்பூசி

தேசிய சேவையில் சேரும் முன்னர் தடுப்பூசி

2 mins read
93717254-54f3-4960-8030-ef96024b4ee6
-

தங்­கள் அடிப்­படை ராணு­வப் பயிற்­சியை மேற்­கொள்­வ­தற்கு முன்­னால் முழு­நேர தேசிய சேவைக்­குப் பதிந்­தி­ருப்­போ­ருக்கு முதல் கொவிட்-19 தடுப்­பூசி போடப்­படும்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­று­டன் வாழப் பழ­கிக்­கொள்­ளும் முயற்­சி­களில் ஒன்­றாக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை மேற்­கொள்­ளும் பல நட­வ­டிக்­கை­களில் இது­வும் ஒன்று. செலா­ராங் ராணுவ முகா­மில் முழு­நேர தேசிய சேவை­யில் இணை­வ­தற்­கான ஆள்­சேர்ப்பு நட­வ­டிக்­கை­யில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளுக்கு நேற்று முன்­தி­னம் தடுப்­பூசி போடப்­பட்­டது. அவர்­களில் 90 விழுக்­காட்­டுக்கும் மேற்­பட்­டோ­ருக்கு முதல் தடுப்­பூசி போடப்­பட்­டது.

அவர்­கள், அடிப்­படை ராணு­வப் பயிற்சி நடத்­தப்­படும் தெக்­கோங் தீவில் காலடி எடுத்­து­வைக்­கும் முன்­பாக கொவிட்-19 பரி­சோ­த­னை­யும் செய்­யப்­பட்­டது. இதன்­வழி தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்­களை அடிப்­படை ராணு­வப் பயிற்சி மையம் (பிஎம்­டிசி) விரை­வில் அடை­யா­ளம் காண முடி­யும்.

தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங் எங் ஹென், சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை தினத்துக்காக முன்­கூட்­டியே அளித்த நேர்­கா­ண­லின்­போது மேற்­கண்ட விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை மற்­றும் தற்­காப்பு அமைச்­சை சேர்ந்த 90 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் தங்­கள் முதல் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார்­கள் என்­றும் ஜூலை இரண்­டாம் வாரத்­திற்­குள் 92 விழுக்­காட்­டி­னர் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்டு முடித்­தி­ருப்­பார்­கள் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார். இதன் மூலம் நோய் எதிர்ப்­புச் சக்­தி­யைக் கொண்ட குழு­ம­மாக சிங்­கப்­பூர் ஆயு­தப் படை இருக்­கும் என்­றும் அவர் சொன்­னார்.

செயல்­பாட்டு ராணு­வப் பிரி­வு­க­ளை­யும் எதிர்­கா­லத் தள­ப­தி­க­ளை­யும் உரு­வாக்க பிஎம்­டிசி முக்­கிய அங்­கம் வகிக்­கிறது என்­றும் தடுப்­பூசி பற்­றிய கேள்­வி­க­ளுக்­குப் பதில் அளிக்க முழு­நேர தேசிய சேவை­யில் இணை­ய­வி­ருப்­போ­ருக்­கா­க­வும் அவர்­க­ளது பெற்­றோ­ருக்­கா­க­வும் மெய்­நி­கர் கலந்­து­ரை­யா­டல்­கள் நடத்­தப்­படும் என்­றும் பிஎம்­டிசி தள­பதி கர்­னல் யீ கொக் மெங்க் கூறி­னார். எனி­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது கட்­டா­யம் ஆக்­கப்­ப­டாது.

ராணு­வப் பயிற்­சி­யி­லி­ருந்து வார இறு­தி­யில் வீடு திரும்­பும் வீரர்­கள், வீட்­டி­லேயே தங்கி தனிமைப்படுத்திக் கொள்ளும் கட்­டுப்­பாட்டு ஆணை மே மாதம் அமல்­ப­டுத்­தப்­பட்­டது. இவ்­வாறு வீட்டை விட்டு வெளியே செல்­லா­மல் இருப்­பது கிரு­மித்­தொற்று தொடர்­பான கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­களில் ஒன்று. அடிப்­ப­டைத் தேவை­க­ளுக்­காக மட்­டுமே வீரர்­கள் தங்­கள் உயர் அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்த பின்­னர் வெளியே செல்ல முடி­யும். வீட்­டில் இருக்­கும் ஆணையை மீறு­வோ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­படும். மீண்­டும் மீண்­டும் மீறு­வோர் மீது பயிற்­சிப் பள்ளி நட­வ­டிக்கை எடுக்­கும்.