போலிஸ் சாவடி வெளியே நெருப்பு மூட்டி, வெடி வைத்த சிவபிரகாஷுக்கு சிறை, பிரம்படிகள்

போலிஸ் சாவடி வெளியே நெருப்பு மூட்டி, வெடி வைத்த சிவபிரகாஷுக்கு சிறை, பிரம்படிகள்

2 mins read
5304b92b-3481-46c4-852a-4eac7d282ab1
சம்பவத்திற்குப் பின் சேதமடைந்திருந்த ஒரு பகுதி. கோப்புப்படம் -

அர­சாங்­கத்­திற்கு எதி­ரான தன் கருத்­து­களை வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்ற நோக்­கில் போலிஸ் நிலை­யம் ஒன்­றை எரி­யூட்டி பொது­மக்­க­ளின் கவ­னத்தை ஈர்க்­கத் திட்­ட­மிட்­டார் பாது­காப்பு அதி­காரி சிவ­பி­ர­காஷ் மயில்­ரா­வ­ணன். பின்­னர், காலாங் அக்­கம்­பக்க போலிஸ் சாவ­டியைக் குறி­வைத்­தார். சாவ­டிக்கு வெளியே பல்­வேறு பொருட்­களைப் பற்ற வைத்­தார். இத­னால் கடந்­தாண்டு மார்ச் 13ஆம் தேதி­யன்று இரவு 11.13 மணிக்­கும் 11.23 மணிக்­கும் இடையே 16 முறை வெடி வெடித்­தது.

அத்­து­டன் நின்­று­வி­டா­மல் டவ்­னர் ரோடு, புளோக் 105ன் தரைத் தளத்­தில் அமைந்­துள்ள அந்த போலிஸ் சாவ­டி­யின் கண்­ணா­டிப் பகு­தி­க­ளைக் கோட­ரி­யால் உடைத்து, அரு­கி­லுள்ள ஏழு தூண்­கள் மீது 'ஐஎஸ்­ஐ­எஸ்' என்று சாயம்­கொண்டு எழு­தி­யி­ருந்­தார்.

குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட 31 வயது சிவ­பி­ர­கா­ஷுக்கு நேற்று மூன்­றரை ஆண்டு சிறைத் தண்­ட­னை­யும் ஒன்­பது பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன. இந்த வன்­செ­ய­லில் எவ­ருக்­கும் காயமில்லை. ஆனால், பாதிக்­கப்­பட்ட பகுதி மற்­றும் அரு­கி­லி­ருந்த காருக்குக் கிட்­டத்­தட்ட $20,000 மதிப்­பி­லான சேதம் நேர்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சிவ­பி­ர­காஷ் 2009ஆம் ஆண்டு­ முதல் சமூக விவ­கா­ரங்­களில் ஆர்­வம் காட்­டத் தொடங்­கினார். காலப்­போக்­கில் சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு அர­சாங்­கக் கொள்­கை­கள் நியா­ய­மற்­றவை, செல்­வந்­தர்­க­ளுக்­குச் சாத­க­மா­னவை என்­றும் அதி­கா­ரி­கள் அதி­கப்­ப­டி­யான கட்­டுப்­பா­டு­களை விதிக்­கின்­ற­னர் என்­றும் அவர் எண்­ணி­னார். இத­னால் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் மீது சிவ­பி­ர­காஷுக்கு ஆழ­மான கசப்­பு­ணர்வு உரு­வா­னது. எம்­ஆர்டி நிலை­யம் அரு­கில் போலிஸ் சாவடி இருப்­ப­தால் தன் செய­லால் வழிப்­போக்­கர்­க­ளின் கவ­னத்தை எளி­தில் ஈர்க்­க­லாம் என்று எண்­ணி­னார்.

சம்­பவ இடத்­தில் போலிஸ் கார்­கள் இருந்­தால் அவற்­றை­யும் நொறுக்குவது, போலிஸ் சாவ­டி­யின் கண்­ணா­டி­களை உடைப்­பது, கூட்­டம் கூடி­னால் அவர்­கள் முன்­னால் உரை நிகழ்த்­து­வது, கைதா­ன­தும் தன் குமு­றல்­களை நீதி­மன்­றத்­தில் கூறு­வது ஆகி­யவை ஆட­வ­ரின் திட்­டங்­க­ளாக இருந்­தன. ஆனால், நேற்று நீதி­மன்­றத்­தில் சிவ­பி­ர­காஷ் மௌன­மாக இருந்­தார்.

முஸ்­தஃபா சென்­ட­ருக்கு கடந்­தாண்டு மார்ச்­சில் சென்ற சிவபிரகாஷ், குப்­பைப் பைகள், வாச­னைத் திர­வி­யங்­கள், மெத்­தை­கள் ஆகி­ய­வற்­று­டன் ஒரு கோடரி, ஒரு சுத்­தி­ய­லை­யும் வாங்­கி­னார். தன் பழைய துணி­ம­ணி­கள், மோட்­டார் சைக்­கிள் மின்­கலன்­கள், வாங்­கிய வாச­னைத் திர­வி­யங்­கள் ஆகி­ய­வற்றை ஐந்து பய­ணப்­பெட்­டி­களில் அடுக்கி வைத்­தார். பொருட்­களை லாரி ஒன்­றில் சிவ­பி­ர­காஷ் ஏற்­றி­ய­போது, அவ­ரின் சகோ­த­ரர் அவரை வழி­ம­றித்­தார்.

தன் திட்­டத்தை சிவ­பி­ர­காஷ் சொல்­லி­யதை அடுத்து, அவர் மனதை மாற்ற சகோ­த­ரர் முயற்சி செய்­தார். இதற்­காக சிவ­பி­ர­கா­ஷின் நண்­பர்­க­ளின் உத­வி­யை­யும் நாடி­னார். ஆனால் நண்­பர்­க­ளின் அறி­வு­ரை­யும் பல­ன­ளிக்­க­வில்லை.

அதி­க­ளவு மது அருந்­தி­விட்டு சிவ­பி­ர­காஷ் வன்­செ­ய­லில் ஈடு­பட்­டார். தக­வல் அறிந்து சம்­பவ இடத்­திற்கு வந்த போலி­சார், அரு­கில் புல்­மீது சட்­டை­யின்றி ராணு­வக் கால்­சட்டை, 'பூட்ஸ்' கால­ணி­யு­டன் அமர்ந்­தி­ருந்த சிவ­பி­ர­கா­ஷைக் கைது செய்­த­னர். சிவ­பி­ர­காஷ் முகத்­தில் பச்சை, கருப்பு உரு­ம­றைப்பு களிம்பு பூசப்­பட்­டி­ருந்­தது. இந்நிலையில் ஆட­வ­ருக்கு மருட்சி கோளாறு உள்­ளது என்­றும் அவர் ஆபத்­தான ஒரு குற்­ற­வாளி என்­றும் அர­சுத்­ த­ரப்பு தெரி­வித்­திருந்தது.