இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் சிங்கப்பூரின் நிதித் துறை ஏறத்தாழ ஆறு விழுக்காடு ஏற்றம் கண்டதாக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் நேற்று தெரிவித்தார்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் சிங்கப்பூரின் பொருளியல் மீட்சி மேம்படும் என்று ஆணையம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பொருளியல் கடந்த ஆண்டு 5.1 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக ஆணையம் கூறியது. 2019ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு கொவிட்-19 சூழலுக்கு முன்பு பொருளியல் வளர்ச்சி வேகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. வங்கி, காப்புறுதி, நிதி நிர்வாகம், கட்டணச் சேவைகள் ஆகிய துறைகள் நல்ல வளர்ச்சி கண்டன.
"இந்த ஆண்டிலும் நிதித் துறை தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என நம்புகிறோம்," என்றார் திரு மேனன்.
கடந்த ஆண்டில் நிதிச் சேவைகள், ஃபிண்டெக் துறைகள் 2,500 வேலை வாய்ப்புகளை உருவாக்கின. தொழில்நுட்பம், நிதி நிர்வாகம், வங்கிகள், காப்புறுதி போன்ற துறைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் 6,500 வேலை வாய்ப்புகளை நிதி நிறுவனங்கள் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் வங்கி களுக்கான ஈவுத்தொகை கட்டுப்பாடுகளை நீட்டிப்பது தேவை
யானதுதானா என மதிப்பீடு செய்ய ஆணையம் சோதனை நடத்தி வருவதாக திரு மேனன் கூறினார்.

