தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செல்­லப் பிரா­ணி­கள் தொடர்­பில் புதிய விதி­கள்: பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கருத்­து­கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன

2 mins read
1d266642-bd5e-4647-8fae-1d07a46f33ea
-

நாய் இனப்­பெ­ருக்­கம், வம்­ச­வ­ழி­யாக வரும் பாத­க­மான குறை­பா­டு­களை உடைய நாய்­கள் இனப்

பெருக்­கம் செய்­வ­தற்குத் தடை விதித்­தல் போன்ற புதிய விதி­களை 'எனி­மல் அண்ட் வெட்­ரி­னரி சர்­விஸ்' எனப்­படும் விலங்கு மருத்­துவ சேவை அமைப்பு அறி­மு­கப்

படுத்த உள்­ளது.

இதற்­காக அது பொது­மக்­கள் கருத்­து­களை வர­வேற்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக பொது­மக்­கள் தங்­கள் கருத்­து­களை இணை­யம் வழி இம்­மா­தம் 31ஆம் ேததிக்­குள் தெரி­விக்­க­லாம்.

தேசிய பூங்­காக் கழ­கத்­தின்­கீழ் வரும் விலங்கு மருத்­துவ சேவை அமைப்பு பற்­றிய மறு­ஆய்­வுக்­குப் பின் புதிய விதி­கள் குறித்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது.

2019ஆம் ஆண்டு தொடங்­கிய இந்த ஆய்வு செல்­லப் பிராணி இனப்­பெ­ருக்­கம், அவற்­றின் காப்­ப­கங்­கள் ஆகி­ய­வற்றை முன்­னு­ரிமை தர­வேண்­டிய அம்­சங்­க­ளாக அடை­யா­ளம் கண்­டது.

இவற்­றில் விலங்கு நலன், விலங்கு சுகா­தா­ரம் போன்­ற­வற்றை பாது­காக்க உரி­மம் வழங்­கும் தர­நி­லை­களை உயர்த்த வேண்­டும் என இதில் முக்­கிய பங்­கு­தா­ரர்

களாக விளங்­கு­வோர் கூறி­னர்.

இதன் தொடர்­பில் 2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 'பிளேட்­டி­னம் டோக்ஸ் கிளப்' என்ற காப்­ப­கத்­தில் ஷெட்­லேண்ட் ஷீப்­டாக் எனப்­படும் ஒரு­வகை நாய் இறந்­தது பெரும் சர்ச்­சைக்­குள்­ளா­னது.

இதற்கு மூன்று மாதங்­கள் கழித்து, 'போர்ட் அண்ட் பிளே' என்ற காப்­ப­கத்­தில் மால்­டீஸ் வகை நாய் ஒன்று ெசந்­தோ­சா­வில் நீச்­சல் சம்­ப­வத்­தில் இறந்­த­தும் இங்கு நிைவுகூ­ரத்­தக்­கது.

விலங்கு மருத்­துவ சேவை அமைப்­பின் தொழில், உயிர்­பா­து­காப்பு நிர்­வாக இயக்­கு­ந­ரான டாக்­டர் சுவா ஸி ஹூங், புதிய விதி­கள் தற்­பொ­ழுது எவ்­வி­தக் கட்­டுப்

பாடு­களும் இன்றி செயல்­படும் 50 செல்­லப் பிராணி நடத்­து­நர்­களை உள்­ள­டக்­கும் என்று கூறி­யுள்­ளார்.

இந்­தப் புதிய விதி­கள் பூனை­கள், மற்ற சிறிய விலங்­கு­க­ளை­யும் உள்­ள­டக்­கும் என்­றும் விளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போ­தைய நிலை­யில் சுங்கை தெங்கா­வில் உள்ள ஐந்து காப்­பங்­களும் 20 இனப்­பெ­ருக்க அமைப்­பு­கள் மட்­டுமே விதி­மு­றை­க­ளு­டன் கூடிய உரி­மம் பெற்­றவை.

நேற்று அறி­விக்­கப்­பட்ட புதிய விதி­க­ளின்­படி, வர்த்­கக ரீதி­யில் செயல்­படும் செல்­லப் பிராணி வளர்ப்பு அமைப்­பு­களும், காப்­பக நடத்­து­நர்­களும் தின­மும் தங்­கள் பரா­ம­ரிப்­பில் உள்ள விலங்­கு­களை பரி­சோ­தனை செய்து, அவை வலி­யில் இருக்­கின்­ற­னவா, காயம், நோய் அல்­லது வேறு ஏதே­னும் கார­ணத்­தால் அசா­தா­ரண முறை­யில் நடந்­து­கொள்­கின்­ற­னவா, என்று கண்­ட­றிய வேண்­டும்.

மேலும், இனப்­பெ­ருக்­கம் செய்­வோர், விலங்­கு­கள் தொடர்­பாக முறை­யான தக­வல்­கள் வைத்­தி­ருத்­தல், விலங்­கு­கள் தங்க போது­மான இட­வ­சதி, விலங்­கு­க­ளைக் கையாள்­வோ­ருக்கு போது­மான பயிற்சி அளிப்­பது போன்ற மற்ற கடு­மை­யான விதி­களும் நேற்று அறி­விக்­கப்­பட்­டன.