கொவிட்-19னுடன் வாழ்க்கையைத் தொடரும் நிலை ஏற்பட்டாலும் தொடர்ந்து முகக்கவசம் அணிவது முக்கியம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
கிருமிப் பரவலை அது தடுக்கும் என்றார் அவர்.
கடைசியாக முடிவுக்கு வரும் கட்டுப்பாடுகளில் முகக்கவசம் அணிவதும் ஒன்றாக இருக்கக்கூடும் என்றார் அவர்.
முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அறிவித்ததும் இஸ்ரேலில் கிருமித்தொற்று பாதிப்பு மோசமடைந்ததை திரு ஓங் சுட்டினார். அடுத்த பத்து நாட்களில் முகக்கவசம் அணிவதை இஸ்ரேல் கட்டாயமாக்கியதை அவர் நினைவூட்டினார்.

