தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$9.23 மி. மோசடி: 14 வயது நபர் உட்பட 334 பேரிடம் விசாரணை

2 mins read
a13d0878-a5f1-47f0-b6dd-933c0f83904c
-

சுமார் $9.23 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான பணம் மோசடி செய்­யப்­பட்­ட­தன் தொடர்­பில் போலி­சார் 334 பேரை விசா­ரித்து வரு­கின்­ற­னர். அவர்­களில் ஒரு­வர் 14 வயது இளை­யர்.

அது பற்றி நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில். பல்­வேறு மோச­டி­கள் உள்­ளிட்ட 872 சம்­ப­வங்­களை விசா­ரித்து வரு­வ­தாக போலி­சார் தெரி­வித்­த­னர். சந்­தேக நபர்­களில் 225 பேர் ஆண்­கள், 109 பேர் பெண்­கள். அவர்­கள் 14 வய­துக்­கும் 72 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

வர்த்­தக விவ­கா­ரங்­க­ளுக்கான பிரி­வும் வேறு ஏழு போலிஸ் பிரிவு­களும் இணைந்து, ஜூன் 19 முதல் ஜுலை 2 வரை தீவு முழு­வ­தும் நடத்­திய நட­வ­டிக்­கை­யில் அவர்­கள் பிடி­பட்­ட­னர்.

வர்த்­தக நிறு­வ­னங்­கள், தொழில்­நுட்ப உதவி, அர­சாங்க அதி­கா­ரி­கள், சீன அதி­கா­ரி­கள் போல ஆள்­மா­றாட்­டம் செய்து போலி மின்­னஞ்­சல்­கள் அனுப்­பி­ய­வர்­கள், இணை­யத்­தில் காதல் வலை விரித்­த­வர்­கள், ஆகி­ய­வற்­று­டன் மின்­வர்த்­த­கம், முத­லீடு, வேலை­கள், கடன், போலி சூதாட்­டத் தளங்­கள் தொடர்­பான மோச­டி­களில் ஈடு­பட்­டோர் அதில் அடங்­கு­வர்.

மோசடி செய்­தது, கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றி­யது, கள்­ளத்­த­ன­மான பணப் பரி­மாற்­றத்­துக்கு உத­வி­யது ஆகிய குற்­றங்­க­ளின் தொடர்­பில் அவர்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

குற்­ற­வி­யல் சட்­டத்­தின் கீழ், மோசடி செய்தவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்­டனை அல்­லது அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

லஞ்ச ஊழல், போதைப் பொருள் கடத்­தல், இத­ர கடும் குற்­றங்­ களுக்கு எதி­ரான சட்­டத்­தின் கீழ், கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­றி­ய­வர்­க­ளுக்கு 10 ஆண்டு சிறை, $500,000 அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­பட­லாம்.