டெங்கி காய்ச்சலைத் தடுக்க சிங்கப்பூர் கையாண்டிருக்கும் வோல்பாக்கியா முறை ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையை சுமார் 98 விழுக்காடு குறைத்துள்ளதாகத் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் டெங்கிக்கு ஆளானோரின் எண்ணிக்கை 88 விழுக்காடு குறைந்தது. ஈசூன், தெம்பனீஸ், புக்கிட் பாத்தோக் ஆகிய பகுதிகள் அவற்றில் அடங்கும்.
வோல்பாக்கியா முறை ஏடிஸ் கொசுக்கள் இனப் பெருக்கம் செய்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த வருடத்தின் கடைசி காலாண்டில் மரின் பரேட் போன்ற பகுதிகளிலும் வோல்பாக்கிய முறை செயல்படுத்தப்படவுள்ளது.

