போதை­மிகு அபின், $50,000 ரொக்­கம் பறி­மு­தல்

1 mins read
1d5bbd6e-6e4d-407b-ba7c-ea4a291dbe4d
-

மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் இரண்டு சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கைது செய்­த­னர். அதை­ய­டுத்து, ஏறத்­தாழ ஒரு கிலோ போதை­மிகு அபின், பல்­வகை போதைப்­பொ­ருள், $50,000 ரொக்­கம் ஆகி­ய­வற்றை அவர்­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

தெம்­ப­னிஸ் ஸ்தி­ரீட் 83 அரு­கில் 65 வயது ஆட­வ­ரும் 55 வயது பெண்­ம­ணி­யும் பிடி­பட்­ட­னர்.

அந்த ஆட­வ­ரி­டம் 938 கிராம் போதை­மிகு அபி­னும் $7,000 ரொக்­க­மும் இருந்­தன.

அத­னைத் தொடர்ந்து தெம்­

ப­னிஸ் வட்­டா­ரத்­தில் உள்ள அவ­ரது வீட்­டில் சோத­னை­யிட்­ட­போது போதைப்­பொ­ரு­ளும் ரொக்­க­மும் சிக்­கின.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப்­பொ­ரு­ளின் மொத்த மதிப்பு $102,000க்கும் அதி­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.