இந்தோனீசியாவில் கிருமித்தொற்று 40,000க்கும் அபாயம் அதிகரித்துவர அந்நாட்டின் அரசாங்கம், சிங்கப்பூர் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து உயிர்வாயு கலன்களை தருவிக்க முனைந்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து 10,000 ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் யூனிட்டுகளுக்கான முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக இந்தோனீசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிருமிப்பரவலின் வேகம் அதிகரித்துவர அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் அந்நாட்டில் புதிதாக 31, 189 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாகவும் 728 பேர் உயிரிழந்ததாகவும் பதிவாகியுள்ளது. இவை முன்னைய தினசரி தொற்று எண்ணிக்கைகளைவிட அதிகம்.
இந்தோனீசியாவில் இதுவரை 2, 345, 018 கொவிட்-19 கிருமித் தொற்றுகளும் 61, 868 மரணங்களும் பதிவாகியுள்ளன. தென்கிழக்காசியாவில் ஆக அதிகமாக பாதிப்படைந்துள்ள நாடு இந்தோனீசியா.